அப்போது நாங்கள் குடியிருந்தது
நடிகவேள் திரு.MR ராதா அவர்களின் காலனியில்.
நடிகவேள் திரு.MR ராதா அவர்களின் காலனியில்.
ஆம் அந்த ஏரியா முழுவதும் அவர் சொத்தாக இருந்தது.
அங்கு சுமார் 60 வீடுகளை தொகுப்பாக அபார்ட்மெண்ட் சிஸ்டத்தில் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.
அவரது மைத்துனர் குடும்பத்துடன் வசித்துக்கொண்டு பராமரித்துக்கொண்டிருந்தார்.
ராதாவின் முதல் மனைவி பெத்தம்மா என அன்பாக அழைக்கப்பட்ட சரஸ்வதி அம்மாள்,அவர்களுக்கு என் அம்மாவை மிகவும் பிடிக்கும்..அம்மா,கையில் காபி சாப்பிடவே வருவார்.சென்னையிலும்,இங்கும் மாறி,மாறி வசிப்பார் .கைப்பிடித்து அழைத்துச்செல்ல என்னை எப்போதும் அழைத்தபடி இருப்பார்.
காலனியின் நடு நாயகமாய் அமைந்திருந்த அவர்களின் வீட்டின் அருகில் எங்கள் வீடு, சிறுவயதில் ராதா, ஆட்களை ஏவியபடி புகைத்தபடி நிற்பதை பார்த்திருக்கிறேன் ,அருகில் சென்று பேச பயம்..அவரின் தோரணை அவ்விதமாக இருக்கும்.
அவரின் இரண்டாவது மனைவி தனலஷ்மி அம்மாள்(திரு.ராதாரவி அவர்களின் தாயார்)கொஞ்சம் ஸ்ரிக்ரிட்..அதிகம் பேசமாட்டார்,அவர் சரஸ்வதி அம்மாளின் உடன்பிறந்த தங்கை.
ராதா அவர்களின் மறைவின் போது, கோலகலமாய் இருந்தது அந்த ஏரியாவே ,பந்தலும் ,கூச்சலும் ,சமையலும் ..செல்லுலாய்ட் நினைவுகளாய் !
மாமாவின் மகளையே மணந்த திரு.ராதாரவி அவர்கள் திருச்சி ஒட்டி எந்த ஷூட்டிங் இருந்தாலும் அவர்களின் வீட்டில் வந்து,சக நடிகர்களுடன் ஓய்வெடுத்து செல்வது வழக்கம்..அப்படி சந்திரசேகர் , S.S. சந்திரன் ,பாண்டியன் , காந்திமதி முதலியோர் அடிக்கடி வருவதுண்டு.
ஒரு முறை சில்க் ஸ்மிதா வந்திருந்தார்.
என் தங்கை சின்ன குழந்தை..கொஞ்சம் துடுக்காகவும் பேசுவாள் , நைனா என்று எங்களால் அழைக்கப்பட்ட ராதாரவி அவர்களின் மாமனார், வழக்கம்போல எங்களிடம் சில்க் வந்திருக்காங்க,வாங்க அறிமுகபடுத்தறோம், ந்னு அம்மாவ கூப்பிட ,அம்மா..இல்லை அப்பறமா வர்ரேன் என சொல்லிட ,என் தங்கையோ(2வயது இருக்கும்) .." எங்க சில்க் ,நா வரேன்" ..ந்னு அவர் கையை பிடித்துக்கொண்டே நேர சில்க் மடியில் போய் உட்கார்ந்து கொண்டு , குசலம் விசாரிச்சுக்கொண்டு,வெளியில் வரவே இல்லை.
அம்மாக்கு ஒரே கவலை,குட்டிப்பெண் உள்ள போய்,என்ன பண்றாளோ ந்னு, எல்லாரிடமும் பெரிய மனுஷிமாதிரி பேசிவிட்டு,சாக்லேட் டுகளுடன் வெளியே வந்து,எங்களிடம் ஒரே கதை ...மறக்காத நினைவுகள்..
எம்.ஆர்.ராதா அவர்களின் மணிமண்டபம் திறந்து போது எங்கள் குடியிருப்பே 1வாரம் அல்லோகலப்பட்டது, திறந்து வைத்தது,கலைஞர் ,வீரமணி அவர்கள் ..அனைத்து திரைப்பட கலைஞர்கள் புடைசூழ ..
எங்களுக்கும் பேட்ச் தரப்பட்டது காலனிக்குள் நுழைந்து,வெளிவரவே !!
பெத்தம்மா..என எங்களால் அழைக்கப்பட்ட சரஸ்வதி அம்மாள்(வாசு வின் தாயார்,வாசு விக்ரமின் பாட்டி) மிகவும் அன்பாக பழகுவார் ..எந்த நல்ல காரியம் ,நாள் பார்க்கவேண்டியிருந்தாலும் அப்பா,அம்மாவிடம் பகிர்ந்துபின்பே செய்வார்கள் .
அவர்களின் நாடகக்குழுவில் இணைந்திருந்தார் கணேசன் என்பார் அடிக்கடி ..
அவர் நம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களே! அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார் ..ஆக்ட் கொடுப்பது..அப்படின்னுதான் குறிப்பிடுவார்..
என் திருமணத்திற்கு முன்பே அடிக்கடி தேனாம்பேட்டை அவர்களின் இல்லத்திற்கு அழைத்திருந்தார் , முடியவில்லை. . திரு. Chola Nagarajan அவர்களின் கலைஞர் டிவியின் சந்தித்தவேளையில் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார் நடிகவேள் பற்றி...
அதுவே நினைவலைகளை கிளர்ந்து இப்பதிவினை எழுததூண்டியது... smile emoticon
இப்போது நாங்கள் வசித்த வீடுகள்
மாற்றப்பட்டு விட்டன.
மாற்றப்பட்டு விட்டன.
காலங்கள் உருண்டோட நினைவுகள் மட்டுமே பசுமையாய் !!
photo courtesy : Google images
No comments:
Post a Comment