மாதங்களில் சிறந்த மார்கழி
சிலுசிலுவென அதிகாலைப்பனி
சாணம் தெளித்த ஈர மண்
மலரத்துடிக்கும் மலர்களின் மணம்
எங்கோ கேட்கும் திருப்பாவை இசை!
வாசலில் காபியுடன் அம்மா
போடுவதை பெருமையுடன் பார்த்து போகும் அப்பா
கொசுக்கடியுடன் கோலத்தில் திளைத்து
பளீரென வெண் கோலம்
வரைந்த கைகளுடன் நான்
மார்கழி ஒரு வசந்தம்
வருடம் முழுவதும் மார்கழியாய்
அப்படியே வாழ்ந்திட ஆசைதான் ...
No comments:
Post a Comment