Tuesday 2 January 2018

திருவிடைமருதூர்..

சமீபத்திய வகேஷனில், திருவிடைமருதூர்-ராமேஸ்வரம் சென்று வரும் வாய்ப்பு கிட்டியது.

9ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிடைமருதூரில் மெகா சைஸ் வெள்ளை  நந்தி முன் அமர்ந்து பிரமிப்பைக்கூட்ட திருவாடுதுறை ஆதீனத்திற்கு கட்டுப்பட்ட கோவில்..மாணிக்க வாசகர் மற்றும் சில நாயன்மார்களால்..பாடல் பெற்ற ஸ்தலம்.!

இங்கு சில விஷயங்கள் என்னை ஈர்த்தன...அவை...இதோ ..வந்துட்டேன்..அதற்குதான் !!

மெகா சைஸ் ஜோதிமய லிங்கமான மகாலிங்கேஸ்வரர் முன்பு..அத்தனை அழகுடன்.. ஆபரணங்களுடன் ஒரு பாவை விளக்கு..அப்பப்பா..வைத்த கண்களை..என்னாலேயே அடுத்த இடத்தில் நகர்த்த முடியவில்லை.

இதை வடித்த சிற்பியின் பெயர் கண்ணாரபத்திரபுத்திர பத்தர்.. ! எத்தனைப்பெரிய....பெயர்..அதே பஞ்சதந்திரம் தேவயானி ஸ்டைல்ல படித்தேன். செதுக்கி..அந்தக்கோவிலில் வைத்த நாள் 4-7-1853.

அப்படி என்னங்க ஸ்பெஷல் அந்த விளக்கில்...என உங்களைப்போல எனக்கும் தோன்றியது !
 இருங்க..அந்த ஸ்டோரியும் ...

தஞ்சை சோழர்கள்,பின் பாண்டியர்கள்,நாயக்கர்கள் ,மராட்டிய மன்னர்கள் வசம் இருந்திருப்பதெல்லாம்..ஹிஸ்டரி.!

அப்படி ஒரு மராட்டிய மன்னர் தான் அமர்சிங்,அவருக்கு ஒரு மகன்..பிரதாப் சிங். அவர் வசிச்சது அதே திருவிடைமருதூர் வடக்குவீதியில் இருந்த அரண்மனையில் !

(யம்மா..அப்ப..அந்த ஊர் எப்படி இருந்திருக்கும் என்ற என் கற்பனையை கொஞ்சம் கட்டிவைத்தேன்..!)

அவருக்கு திருமணமாகி யமுனா பாய் சாயேப் & சஹவர்பாய் சாயேப் என்ற இருமனைவிகள் (பல்லிருந்தவர் பக்கோடா சாப்டுருக்கார்..! நாம் ஸ்டோரியைப்படிப்போம் :p)

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை..நம் இளவரசருக்கு மூன்றாவதாக தன் மாமா பெண்.. அம்மூணு பாய் சாயேப் ந் மேல்...காதல் பொங்கிட கல்யாணம் செய்துக்கொள்ள அண்ணலும்  விரும்ப,அவளும் விரும்ப.. நம் அம்மூணுபாயும் காதலோ காதலாக..எதிர்ப்பும் எக்கசக்கமாக எழுந்திருக்கிறது.
அம்மணி..ச்சே..அம்முணு பாயி.. லட்ச தீபம் ஏற்றுகிறேன்..மகாலிங்கேஸ்வரே என்னை மனதால் வரித்த பிரதாபசிங் மஹாராஜா வுடன் சேர்த்து வையுங்கள் என்று வேண்டிக்கொள்ள..அப்படியே நடந்தேறியிருக்கிறது..திருமணமும்.
செம குஷியான அம்மணி..தன்னையே பாவை விளக்காக வடிக்க விரும்பி..அதனை அப்படியே கல்வெட்டாக்கி ஆவணப்படுத்தியிருக்கிறார்.

அத்தனை அழகுடன்..இன்றும்..சன்னதியில் அவரே கையில் விளக்கேந்தி நிற்பது தத் ரூபமான சிலை..பளிச்சென்று கண்களைக்கட்டிப்போடுகிறது..!

எத்தனை எத்தனை டிசைன்ஸ்ல நகைப்போட்டுருக்காங்கப்பா..அப்ப..அப்படின்னு..சொல்லிட்டு கணவரை தேடினேன்..அவர் எஸ்கேப்..! எப்படித்தான் நம் மைண்ட் வாய்ஸ் கண்டுபிடிக்கறாங்களோ.. !! :p


No comments:

Post a Comment