Wednesday 17 June 2015

திருமாலை - எண்ணமும் எழுத்தும்

இணையதளம் ஒரு வலிமையான  வலைத்தளம் , 

, இதன் முக்கியத்துவத்துவத்தை நமக்கு  புரிய வைக்க , ஆட்சி மாற்றங்களும், தடை செய்யப்பட்ட நாடுகளும் உள்ளன.

தமிழ் பக்தி இலக்கியங்களில் தமிழின் பெருமை, சொல்லும் விஷயங்கள். நிறைய உள்ளன, அதில் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் , திருவாசகம், திருவெம்பாவை முதலியவைகளும் வருகின்றன. ..

என்னைக்கவர்ந்தவை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் .

அனைத்தையும் கற்றுத்தேற ஆயூள் போறாது என்பதால், கவர்ந்த ஒன்றை தெரிந்துகொள்ளலாம் என்பதில், நான் அறிந்தவற்றை (எனது எளிய தமிழ் அறிவு, ஆர்வத்தின் அடிப்படையில் ) இந்த தளத்தில் பகிர உள்ளேன் .

ஜனரஞ்சக பதிவுகளுக்கான ஆதரவு இருக்காது எனினும் ஆன்மார்த்த பதிவுகளாக , இயன்ற வரையில் முன்னோர் சமர்ப்பித்த வழியில்..இதனை எழுத இருக்கிறேன் .

அதில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ..முதலாவதாக "திருமாலை" . பாடல்களால் திருமாலுக்கு , மாலையாக இந்த திருமாலை யை சமர்ப்பித்த ஆழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் பொடியாழ்வார்.

இவர் திருமண்டகக்குடி-சோழ நாட்டைச்சேர்ந்த எனும் சிற்றுரூரில் பிறந்து , விப்ர நாராயணன் என்ற இயற்பெயருடன் , திருமாலின் தொண்டர்களுக்கு பணிவிடை செய்து, அவர்தம் காலடி மண் ஒற்றி, பூ தொடுத்து, திருவரங்கம் வாழ் ரெங்கனுக்கு பாடல்கள் சம்ர்பித்து தொண்டு செய்தவர்..

இனி உங்களின் ஆதரவுடன் தொடர இருக்கிறேன் ...திருமாலையை ...

No comments:

Post a Comment