Monday 29 June 2015

கூடான வீடு

ஒரு நாள் காலை வழமைப்போல பால்கனி செடிகளுக்கு நீர் விட சென்றவள்..ஒரு காய்ந்த தொட்டி செடியில் தண்ணீர் ஊற்ற ரெண்டு வெள்ளை முட்டை மிதந்தது..

ப்யூர் வெஜிடேரியன் , மேலும் நகர வாழ்க்கையில் வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு எந்த பறவை, இந்த பாலைவனத்தில் அதுவும் கொளுத்தும் வெயில் சுள்ளுன்னு உறைக்கும் தொட்டியில் இட்டுச்சென்றது என்ற ஆச்சர்ய ரேகைகள் முகத்தில் பரவ..பால்கனி கதவை மூடிவிட தாய் பறவை வந்தது..ஆம் அது புறாவின் குடும்பம்.இங்கு புறாக்கள், சிட்டுக்குருவிகள் நிறைய பார்க்கலாம்..கீழே பார்க்கிங் ஏரியாவில்.

அன்றிலிருந்து ஆரம்பித்தது..எங்கள் விருந்தாளியிடம் எங்களின் பார்வையும்
தினமும் அதிசயமாக நாங்கள் பார்ப்பதும்..
நானும் நிழலுக்காக பேப்பர் , குடை இப்படி பலதும் ட்ரை பண்ண தாய்ப்பறவை பயந்துதான் போனதும்..நீர் , தானியங்கள் தூவினோம்.அது சாப்பிட்டதா தெரியவில்லை.

எங்கள் மனம் கொஞ்சம் நிறைந்தது.
இரவுப்பகலாக தாய்ப்பறவை எங்கும் நகராமல் அடைக்காக்க , தந்தையான என் கணவர் தாயாகிய விந்தையையும் காண நேர்ந்தது.
எத்தனை நாளில் அடைக்காக்கும்..உணவு அதன் இருப்பிடம் இப்படி அத்தனை விஷயங்களையும் அவர் சேகரிக்க , மேன்மேலும் ஆச்சர்யம் , குழந்தைகள் தினம் பள்ளி விட்டு வந்தததும் ஒரு விஸி ட் , பக்கத்தில் டைனிங் டேபிள் இருந்ததால்..டின்னர் டைம் டிஸ்கஷன் என்று எங்கள் உலகில் அந்தப்பறவையும் அந்த முட்டையும்.

ஒரு நாள் முட்டை உடைந்து சின்ன குஞ்சுப்பறவைக்கண்டேன்...
அதற்குப்பின்..சிறிது சிறிது பறந்த தாய் பறவை என்ன நம்பிக்கையோ..என்னை நம்பி விட்டுச்சென்றது.

10 நாட்கள் கண்முன் அந்த குஞ்சுப்பறவை வளர்ந்தது..இறகுகள், அலகு விரிந்தன.. மெல்லிய சப்தம் எழுப்பியது..! அதுவும் ஆனந்தம்..!
நடுவே என் பில்டிங்ல் உள்ள ஒரு ப்ரெண்ட் இதே மாதிரி என் பக்கத்துவீட்டுக்காரர் பால்கனியில் ஆனதாகவும் அங்கு ரெண்டு குஞ்சு பொறிந்து, அது தத்தி தத்தி பறக்க முயன்று இறந்து அவர் அதை புதைக்கக்கொண்டு சென்றதாகவும் கூற கிலிப்பற்றியது..! இதென்ன கடவுளே என்று..!!
சற்றே தொட்டிலியிருந்தப்படி எனைப்பார்த்து பழகியது குட்டி..நானும்..அவ்வப்போது தாய் பறவை வந்து..வந்துப்போக..ஒரு நாள்..இறக்கை விரிக்க கற்றுத்தந்தது , குட்டியும் அன்று முழுவதும் விரித்து ,, விரித்து மூட , நான் என் பெண் நடக்க ஆரம்பித்த கணத்தை நினைத்துக்கொண்டேன்..!!

எட்டிநின்று அனைத்தையும் பார்க்க பழகிய எனக்கு தினம் தினம் புது ஆச்சர்யம் தந்தது தாய்ப்பறவை.

ஒரு நாள் தொட்டியை விட்டு பால்கனி சுவற்றுக்கு பழக்கக்கற்றுத்தந்தது..அன்று அங்கே பார்த்தேன்..வேலையாக உள் சென்று வெளிவந்துப்பார்க்க ரெண்டும் பறந்துபோயிருக்கக்கண்டேன்..
எதோ ஒரு வெறுமை..அது குடியிருந்த தொட்டி..கொண்டு வந்துப்போட்ட சில குச்சிகள் என சில தடயங்களை விட்டுப்போனது..ரெண்டு நாளைக்கு பிள்ளைகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.என் ப்ரெண்ட் குழந்தைகளும் பார்த்துசென்றனர்.

அந்த இன்னொரு பொறிக்காத முட்டையையும்..எடுத்துசென்று விட்ட தாய்ப்பறவை இனி எட்டிப்பார்க்குமா தெரியவில்லை..
பறவைகளுக்குள் உள்ள தாய்மையை உணர வைத்து , குடியிருந்து பறந்துப்போனது..பலவற்றை நினைவுப்படுத்தியது.
எத்தனையோ தாய்மார்கள் தம் பிள்ளைகளை ஆண்துணையின்றி வளர்த்துப்பார்த்திருக்கிறேன்.
சில தாய்கள்(என்னையும் சேர்த்து) விழுவதைக்கண்டு பதறினாலும் , தானாக எழுவே பழக்கியுள்ளோம். எதற்கும் பின் செல்லாம்ல்..பின் நின்று முன் விட்டு ரசிப்பதும் ஆனந்தம்.

அனைத்திலும் முன் நின்று அவர்கள் வாழ்வை நாம் ஏன் வாழ வேண்டும்...:)
இது..

 பால்கனியில் ஒரு பாசப்பறவை என்ற பெயரில்..புதிய தலைமுறை இதழில் வெளிவந்தது..

No comments:

Post a Comment