Wednesday 17 June 2015

அபுதாபி க்ராண்ட் மாஸ்க்ம் - அம்மாவும்

அபுதாபி கிராண்ட் மாஸ்க் ல் ஒரு மாலை...
UAE - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ந் தலை நகரான அபுதாபியில் அமைந்துள்ளது..
இனிமையான மாலைப்பொழுதில் யுஏஇ யின் பெரிய மசூதி ,நீண்ட நாட்களாக பார்க்க ஆசைப்பட்டு ,போக முடியாமல், அப்பா,அம்மாவிற்கு காட்டும் சாக்கில் நாங்களும் பார்க்க வந்தடைந்தோம்.
அழகான பசுமையான செடிகளுடன் ,பிரமாண்டமான நுழைவாயிலுடன் காரை பார்க் செய்து மயக்கும் மாலை , சூரியன் தன் கிரணங்களை குறைத்துக்கொண்டு ஆரஞ்சு, இளமஞ்சள் நிறத்தில் சிரிக்க,
உள் நுழைய முயன்ற எங்களை தடுத்து நிறுத்திய செக்யூரிட்டி தலையைசுற்றி , ஸ்கார்பால் மூடாததை குறிப்பிட்டு,எப்படி நுழையனும் என பிரேக் போட்டார்..
கருப்பு நிற அபயா எனும் முழுவதும் அணியக்கூடிய உடை அணிந்தே செல்ல வேண்டும் எனக்கூறி கணவரது எமிரேட்ஸ் ஐடி மட்டும் காட்டி உடை பெறலாம் என வழிக்காட்டி அனுப்பிட வாங்கும் இடம் தேடி சென்ற கணவர் ,போன் செய்து ,வர சொன்னார்,
நானும் அம்மாவும் போட்டுக்கணுமாம் உள் செல்ல.. நம் திருக்கோயில்களில் லுங்கி அணிந்தவர்கள் ,சில கோயில்களில் ஆண்களுக்கு மேல் சட்டை அனுமதியில்லை என்பது சட்டென நினைவில் ப்ளாஷ் ஆக,
நியாயமானதே ,என மதித்து, அதற்கான வழியில் செல்ல ஆரம்பித்தால்..
ஏகப்பட்ட கெடுபிடிகள் ,ஆங்காங்கே செக்யூரிட்டிகள் இருந்தனர் .. அண்டர் கிரவுண்டில் அம்மாவையும் அழைத்துக்கொண்டு இறங்கி போனால்,நம் திருப்பதி க்யூ போல , தனியாக செல்ல நடைபாதை .
இறுதியில் முகம் மறைத்த இருபெண்களிடம் முடிந்தது. எமிரேட்ஸ் ஐடி கேட்டு,பெற்று , கைகாட்டிய திசையில் மீண்டும் ஒரு வழிபயணம் .அனுமார் வால் நினைவுக்கு வந்தது,இஸ்லாமிய இடத்திலும் நம் கடவுளின் நினைவில்
கைகாட்டப்பட்ட இடத்தில் வெவ்வேறு சைஸ்களில் "அபயாக்கள்" கிடந்தன.சுத்தமாய் , கீளீனாய் நல்ல நறுமணத்துடன் .அப்பாடா,எவ்வளவு பயம் போட்டு கழட்டி தர்றதாச்சே,எப்படி இருக்குமோன்னு எண்ண ஓட்டம்.
சுத்தம் செய்யப்பட்டவை உடனுக்குடன் , என்னம்மா மெயிண்டன் பண்றாங்கன்னு அங்கேயே அட! போட வச்சது, அணிந்து வந்ததும், கணவர் கிளிக்கிக்கொள்ள,
பிரமாண்டத்தைக்காணும் ஆவலில் உள் நுழைந்தோம்.. நான்கு புறமும் சூழ் முற்றங்களுடன் , விளக்கொளியில் மார்பிள் கட்டமைப்பில் மின்னியது .
இந்த மசூதி 1997-2007 வருடங்களில் கட்டப்பட்டதாம் ,கட்டித்தந்தது ஒரு இத்தாலி கம்பெனி , பயன்படுத்திய மூலப்பொருட்கள் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது.
இதனை கட்ட விழைந்த Sheik Zayed Bin Sultan Al Nahyan (first present of UAE) கட்டப்பட்டதை காணாமலே இறந்து விட,அவர் இறுதியாய் அருகிலேயே உறங்கிறார் .
பிரம்மாண்டமான தூண்கள் தங்கம், semi precious stones , crystals பதிக்கப்பட்டு,கண்களை எங்கே பார்ப்பதென தெரியாத படி,மயக்கின .அம்மா,அப்பாவிற்கு பிரமிப்பு.
அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட, காலணிகளை வெளியே விட்டு (திருட்டு பயம் இல்லை tongue emoticon ) உள்ளே சென்றோம் ,
பெரிய்ய் ஹால் பகுதி, மேலே பிரமாண்டமான சாண்டிலியர்கள்(swaroski crystals ) வரவேற்க, அமைதியாய் தொழும் இடம்,திருக்குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்ட தங்க பிடிகளுடன் கூடிய மையப்பகுதி..
இப்படி பிரமிப்புக்கு மேல் பிரமிப்பு.
அங்கு விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட் உலகிலேயே நீளமானதாம் ,60,570
சதுர அடிகளில் விரிந்துகிடக்க,சுத்தம் பளீரென..
தானியங்கி,கண்ணாடிகதவுகள், தாண்டி வெளிவந்தும் பிரமிப்பு அடங்காது பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிடம் பிடிச்சுருக்காமா,என அம்மா,
"இதுவும் வழிபாட்டுத்தலம் ,இறைவன் குறை கேட்கும் இடம், சந்தோஷமே" , 50 க்கும் குறையாத மொகலாய அமைப்பில் கட்டப்பட்டிருந்த கோபுரங்கள் .. டூம்களை பார்த்து,
"எல்லா மதத்திலும் ஒரே வழியில் கோபுரம் அமைச்சு, பகவானோட அனுகிரஹம் வேண்டறோம் , இதில் என்ன பாகுபாடு இருக்கு" என்றார் .
ஆச்சாரமாய் ஹிந்து சம்பிரதாய அம்மா, இப்படி கூறினதும் மகிழ்ச்சியாய்,அவர்களை பேட்டரி ஆப்ரேட்டட் காரில்(இலவசம்) கார் பார்க்கிங்கில் இறக்கிவிட..
அபயா..பர்தா என்னாச்சுன்னு தானே,
நானே அம்மாவுடதையும் , திரும்ப அதே இடம் போய் ,ஐ.டி பெற்று கொண்டு, திருப்பி தந்து காரில் அடைக்கலமானேன்..
அருமையான பயணமாய் அன்று முழுவதும் சிந்தனையில்..அந்த Mosque மட்டுமே!!

No comments:

Post a Comment