Friday 26 June 2015

கதை கதையாம் காரணமாம்..

அன்று , அசாதாரணமாக காலிங் பெல் அடிக்க யோசனையுடன் நான் கதவைதிறக்க ,
தெரிந்தவர்கள் தான்!!  , வரவேற்று சோபாவில் அமர்த்தி , விசாரிக்க , என் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தது..பின் வராத சொந்தங்கள் வந்திருந்தால் வராதா !! ??

யார் இவர்கள்..எதற்கு.. , இங்க
விடையாக தந்தனர் பதிலை..

வீட்டில் உடைகள் சட்டென தீப்பற்றி எரிகின்றனவாம் , சாப்பிடும்போது சரியாக வீட்டின் மீது கல்லெறிவதுமாக பலதும் நடக்கிறதாம்.." என்று
கேட்க கேட்க ஏஸியையும் மீறி வியர்த்தது..அப்படியா..என்பதற்குள் ..

(போறததுக்கு..!!)
என் வீடு தள்ளி நாலு தெரு இருக்கும் வீட்டில் இதற்கான பரிஹாரமும் செய்கிறார்களாம்..அதற்கு தான் வந்திருக்கிறார்கள்..! புருவம் உசர ..அப்படியா என கேட்டு முடிப்பதற்குள்..வா நீயும். என கைப்பிடித்து அழைத்துப்போக பித்துப்பிடித்தவள் போல பின் செல்கிறேன்..

அங்கு நாலைந்து பேர் , கறுப்பு உடை அணிந்து , எதோ மந்திரங்கள் உச்சாடனம் செய்ய ..என்னுடன் வந்தவர்களை குளிக்க செய்து..காரணங்கள் விளக்கி , வேறு உடைகள் மாற்றச்செய்து ..ஹோமங்கள் நடக்க .. கண் கொட்டாமல் பார்த்த நான்..தன் பிரச்சனைகள் விலகியதாக அவர்கள் ஓட நான் எப்போது வீடு வந்து சேர்ந்தேன் ..! தெரியவில்லை..

மறு நாள் , அதே காலிங் பெல் , வந்தது என் தோழி , அதே சோபா.. அதே விஷயம் பற்றி பேசினாள்..! என்ன இது ஏன் இப்படி கிளிம்பிட்டீங்க எல்லாரும் என்ற என் மன ஓட்டம் அறிந்தவளாக , எங்க அந்த flower pot கொண்டு வா..என,

ஆட்டோ மேடிக்காக அவள் முன் நீட்டினேன்..உள்ளிருந்த பிளாஸ்டிக் தொட்டியை வெளியெடுத்து ..இங்க பாரு..இந்த வெள்ளைப்பொட்டு..அதான் விபூதி.. உனக்கும் வந்திருக்கு இப்படித்தான் செய்வார்கள் என்றாள் !!

கண்கள் அகல அவளை அனுப்பி விட்டு உட்கார..அடுத்து மீண்டும் காலிங் பெல்..
இம்முறை.. கதவை திறந்த நான்..
தள்ளப்பட்டேன் ..

நுழைந்தது பலர் , அதில் சிலர் நேராக கிச்சனுக்குள் சென்று.. சமைத்ததைக்கொண்டு வரவும் , சிலர் எங்கிருந்தோ வாழையிலைகளை பரப்பவும்..என் கண் முன் பந்தி விரிக்கப்பட ..நான் சமைத்து வைத்த் உணவுகள் பரிமாறப்பட ..

பார்த்துக்கொண்டிருந்த நான் பொங்கினேன் ..ஏன் இப்படி, சொல்லாமல் , கொள்ளாமல்..இப்படி வீட்டுக்குள்ள நுழைஞ்சு எதோ மாதிரி சாப்பிடறீங்களே ..வெக்கமாயில்ல எனவும் ..

சாம்பார் ஊற்றி குழைத்திருந்த கைகள் உதறப்பட்டு..சட்டென அந்த இடம் சுத்தமாக பரபரவென சாமான்கள் மீண்டும் கிச்சனுக்குள் மறு பிரவேசம் செய்ய ..அப்பாடா என்று திரும்புவதற்குள் .. அதிலிருந்த ஒரு பெண்.

பிரிட்ஜை திறந்து பாலை எடுத்துக்காய்ச்சி எல்லோர்க்கும் டபரா , டம்ளரில் ஊற்றிக்கொண்டிருந்தாள்..!

அதிசயமும்..ஆவேசமுமாக அதிர்ந்தவள்..அய்யோ குழந்தைகளுக்காக வச்ச ஹார்லீக்ஸ் , கெஸ்ட்க்காக வச்ச ..பாதாம் மில்க் மிக்ஸ் , எனக்காக வச்ச காபி டிக்காஷன் இப்படி கொட்டி நாசம் பண்றீங்களே
.ஏன் இப்படி..!! எனக்கூச்சலிட்டேன் ....

சட்டென விழிப்பு வந்தது..ஆம் கனவு ..அதில் கூச்சலிட்டபோது நான் பார்த்த முகங்கள் , முதல் நாள் அந்த அமானுஷ்ய வேலைகளுக்கு பரிஹாரம் செய்த குடும்பத்தினர்..!!

ஏன்..எனக்கு இப்படி ஒரு கனா..சிரிப்பும் , யோசனையுமாக ..அதே சிந்தனை..சற்று நேரம்..ஆழ்ந்த உறக்கத்தில் செல்லும் நிலையிலேயே கனவுகள் வருகின்றன எனப்படித்த நான்..அந்த நிலையிலிருந்து மீளவும்..சற்று நேரம் எடுத்துக்கொண்டேன்..

ஆழ் மன சிந்தனைகள் ..கனவுகளுக்கு வித்தாகுமாம்.
.ஆம்..காரணம்..காலசக்கரம்..

நரசிம்மா அவர்களது காலசக்கரம் நாவல் முதல் நாள் படித்து முடித்திருந்தேன்.. அதன் பாதிப்பு என்றுணர்ந்தேன்.

இரவு உறங்கும் வரை படிப்பதும் ஒரு பழக்கமாகிப்போன எனக்கு..இப்படி திரைக்கதை யுடன் கனவாகும் என்பது கனவிலும் தெரியாதது.

சே..திரும்ப.. கனவா !!

அப்படி என்ன அந்த புத்தகத்தில் 3 நாட்களில் விட்டு விட்டு படித்து முடித்த புத்தகம் இழுத்துக்கொண்டது என்னையும்.

நரசிம்மா அவர்களது முன்னுரையுடன் ஆரம்பிக்கும் புத்தகம்..

4 காலகட்டங்களில் பிரயாணிக்கிறது..

காஷ்மீர் குஜ்லா தேவி பீடத்தில் புதைக்கப்பட்டு பின் ஆதி சங்கரரால், தெற்கு நோக்கி எடுத்துச்செல்லப்பட்ட 
ஸ்ரீ சக்ரத்தை(யந்திரம்)  தேடி ஒரு பண்டிதரின் பெண் செல்லும் பயணம்..

அந்த ஸ்ரீ சக்ரம் ஆதி சங்கரரால் புதைக்கப்பட்ட கும்பை எனும் ஊரில் உள்ள கும்பேசுவரர் கோயில்..

அவ்வூரில் உள்ள வேதம் பயின்ற குருக்கள்..அவர் பெண்கள் , பாட்டி , தம்பி பையன் என்ற அவர் குடும்பம்..

அதே பயணத்தில்..டெல்லியில் நடைபெறும்..ராஜ குடும்பத்தில் வழி வந்த அரசியல் தலைவர் - தலைவியின் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் உயிரிழப்புகள்..

அத்தனையும்..அந்த ஸ்ரீ சகரத்துடன் முடிச்சிட்டு, இறுதியில் யார் கைப்பற்றுகிறார்.. பின்னணியில் என்ன என படு சுவாரஸ்மாகக்கொண்டு செல்கிறார் ஆசிரியர் !

வெவ்வேறு வருடங்கள் உள்ளுக்குள் ஒரு காதல் கதை.. புத்தகங்கள் , விளக்கங்கள் என கதாசிரியர் திரட்டிய விபரங்கள் மலைப்பு எனக்கு.. !

அபிப்ரயோகம் எனும்.. மந்திரங்களின் மூலம் தேவதைகளைக்கட்டுப்படுத்தியும் , அவற்றின் மூலம் வேண்டிய காரியங்களை சாதிக்கும் செயல்களையும் விரிவாக சொல்கிறது கதையில்..
உண்மைப்போல நம்பவைப்பது தானே கதாசிரியரின் திறமை..
அதனை செவ்வனே செய்திருக்கிறார்.

திரு. நரசிம்மா அவர்கள்..!

படித்து முடித்ததும்..வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல்..என் கணவருடன் பல டிஸ்கஷ்ன்கள்..இப்படி நடக்குமா..நீங்க கேள்விப்படிருக்கீங்களா..

இப்படி எந்தெந்த தேவதைகளைக்கட்டுப்படுத்தலாம் என்றும்..

அவரும்..வெகு சுவாரஸ்மாக விளக்கிக்கொண்டு வந்தார்
.அன்றிரவு.. படுத்ததும்..உறக்க வர மறுக்க..ராமஜெபம் சொன்னப்படி தூங்கியவளை..

மறுநாள் இந்தக்கனவு வந்து..உலுக்கி எழுப்பியது..காலசக்கரத்தின் சுவையை புரியவைத்தது..

அதுவே இங்கு பதியவும் வைத்தது..

மீண்டும் வேறு புத்தகத்துடன்.. வருகிறேன்.. (ரெங்க ராட்டினம்  2 வருடங்களுக்கு முன் படித்தவள் , இப்போது தான், காலச்சக்கரம் ரசித்தேன்..டூ லேட் ..புரிகிறது )
( ஆனால்..கொஞ்ச நாளைக்கு குடும்ப நாவல்தான்..!! )

No comments:

Post a Comment