Sunday 21 June 2015

போவோமா ..ஊர்கோலம்..துபாய்க்கு..

The walk - Dubai Marina ..
இந்த இடம் சமீபத்தில் உருவானது..
போன வீக் எண்ட்ல் கணவர் போகலாம் என கிளம்பினோம்! என்ன ஸ்பெஷல் ந்னு தானே,
நான் 12 வருடங்களுக்கு முன் இங்கு வந்த போது, காரில் ஏர்ப்போர்ட்டிலிருந்து வரும்போது இருபக்கமும் பார்த்தவை வெறும் மணல், பாலைவனம் மட்டுமே , அந்த இடம் இன்று மயன் கைப்பட்ட அழகிய கான்க்ரீட் ஜங்கிளாக மாறியிருக்கிறது !
இந்த The walk ல் துபாய் மரினாவில் ஒரு பகுதி.. ஐரோப்பிய மக்களை கவரவே கவர்ச்சிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தரை.. ரோடு எல்லாமே கருங்கல்லால் ..
கடைகள் , ரெஸ்டாரண்ட்ஸ் சுற்றிப்பார்க்க , ஒளி வெள்ளத்தில் ஒளிர்ந்தன, எங்கெங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம் ,தனியாகவோ , குழந்தைகளுடன் கை சேர்த்து நடந்தவர்களையோ விரல் விட்டு எண்ணிடலாம் என்ற எண்ணியது என் மனம்.
அரேபிய ,இந்திய மக்களை சற்று தேடியே , கூர்ந்தே பார்க்க வேண்டியிருந்தது,
ஹோட்டல்கள் , ஷாப்பிங் மால், கடைகள் ஐரோப்பிய மக்களை அதிகமாகவே வசீகரித்து, அவர்களை உள்ளிழுத்துக்கொண்டிருந்தன..
சில,சில இந்திய ரெஸ்டாண்ட்டும் இருந்தன
(இல்லன்னா நாங்கள் எப்படி அங்க)
ஒரு சுவர் முழுவதும் டிஜிட்டல் திரை..எதிரில் ஒரு ரெஸ்டாரண்ட், வெகு சிலர் மட்டும் அதுவும் இளைஞர்கள் திறந்தவெளியில் எதிரிலிருந்த திரையில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தனர், அவர்கள் மட்டுமல்ல , அந்த ஏரியாவே பார்க்கலாம் அவ்வளவு பெரிய திரை..அவர்களது ஏவலுக்கு காத்திருக்கும் வெயிட்டர்கள், கேட்டதும் சமைத்துத்தர தயாராக சமையல் கலைஞர்கள்! செக்யூரிட்டி டுடன்..
அப்பப்பா..என்ன ஒரு சமுதாயமென மனம் ஒரு ஆச்சர்யக்குறியை தட்டி விட்டது பட்டென !
சில ஹோட்டல்கள் ப்ரைவேட் பீச்சுடன் ..
(சென்றது மாலைவேளை, இரவானதால் எதும்' பார்க்க 'முடியவில்லை)
கடலை எங்கோ பார்த்தது நினைவிருந்தது..
ப்ளாஷ் பேக்கில் .. ஆனால் இப்போது ஊருக்கும் கடற்கரைக்கும் வித்தியாசமின்றி ..
மெலிதாக கரையைத்தொட்டு செல்லும் அலையில் கால் நனைத்தப்படி இருந்தேன் !
எத்தனை ,எத்தனை மனித ஆற்றல்கள் ,கட்டிடங்களாய் ..
எங்கோ இருந்த கடல் , கட்டிடங்களுக்கு நடுவே வந்து செல்கிறது அதில் படகுகளும்! அதன் கரையில் கட்டிடங்கள் ,மக்கள் குடியேறி வாழ்க்கை ..
Harley -Davidson பைக்கில் சீன் போட்டபடி உருமியப்படி சில ஜிம் ஆண்கள் , ஒன்றுமே பேச இல்லாமல் பேசியப்படி ஜோடிகள் சுதந்திரமான உடைகளுடன் இப்படி ஏகப்பட்ட காட்சிகள் கண்களின் கேமராவில் சிக்கின ..
பார்ஷ் ஏரியா..ஷாப்பிங், பொழுதுபோக்கு ..etc..etc .
பாலையாக பார்த்த பூமி, சொர்க்கபூமியாக ஜொலித்ததைப்பார்த்ததும்..நம் ஊர் கண் முன் வந்து செல்வதை தவிர்க்க முடியாமல், ரசித்தப்படியே..
அலைகளில் சற்று விளையாடியபடி திரும்ப மகன் அழைத்தான், "சீக்கிரம் வாங்கம்மா, இங்க ஒரு பர்ஸ் எடுத்தோம் ..யாரோடதோ! வாங்க" ..என...
உடன் விரைந்தோம்,அருகிலுள்ள செக்யூரிட்டியைப் பார்த்து!
ஆப்பிரிக்கன் செக்யூரிட்டிடம் கணவர் உங்க சூப்பர்வைசரிடம் இதை ஒப்படைக்கிறேன் , அழையுங்கள் என , அவருடன் ஒரு நடை அவர்களது ஆபீஸ் க்கு.. அங்கு தந்து..பேசிக்கொண்டிருக்கும்போதே, இருவர் வந்து சேர்ந்தனர், தங்களை அறிமுகப்படுத்திகொண்டு, பர்ஸுக்கு சொந்தக்காரர், அதற்குள் செக்யூரிட்டி யை தொடர்பு கொண்டு, அங்கு வந்திருந்தனர் ! அப்பாடா!
உரியவரிடம் ஒப்படைத்த நிம்மதியும் உடன் கிடைத்தது...
முதன்முதலில் அங்கு வந்தது.. அந்தப்பகுதி உருவாகிக்கொண்டிருக்கும்போது பார்த்தது, இப்போது பிரமித்தது என அனைத்தையும் அசைப்போட்டபடி இனிமையான இசையும் கேட்டபடியே இருந்தது வீடு திரும்பிய பயணம் ...
இதை விட்டுட்டேனே!! .. இது துபாய் வந்தா அவசியம் பார்க்கவேண்டிய , ஷாப்பிங் பண்ண வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று , இப்போது !

No comments:

Post a Comment