காலையில் போன்...
பேசியவள் நாங்கள் குடியிருந்த பில்டிங்க்கு மூன்று பில்டிங் தள்ளி குடியிருந்த கோவையை சேர்ந்த தமிழ்ப்பெண் .
."சுமீ ..கொஞ்சம் வீடு வரை வர்றீங்களா.."
."சுமீ ..கொஞ்சம் வீடு வரை வர்றீங்களா.."
"எதுக்கும்மா.."
"வாங்களேன் ...சொல்றேன் ..அர்ஜெண்ட்.."
பாவம் என்ன கஷ்டமோன்னு நினைத்து,என் பக்கத்து பில்டிங் ல் இருந்த இன்னொரு தமிழ் ஃப்ரெண்ட் க்கு போன் பண்ண..அவங்களும்," எனக்கும் ,அவ ஃபோன் பண்ணினா, வர்றீங்களா ஒரு எட்டு பாத்திட்டு வந்திடலாம்,என்னன்னு தெரியலயே,பாவம் " என கிளம்பினோம்..
போன் செய்தது ,தமிழ் பெண் தான்..பார்க்கில் அறிமுகம் , கைக்குழந்தையுடன் வசித்துவந்தாள்.., அங்கு நாங்கள் இருந்த ஏரியாவில் , தமிழோ , இந்தியர்களோ பார்ப்பதே அரிது , ஏன் அதிகம் கிடையாது என்றே சொல்லலாம் ! ..
தமிழ் பேச்சுக்கேட்கவே ஏங்குவோம் .. ( தமிழ் பாடல்கள் , டிவி , மூவி ..மூச் ..ஒண்ணும் கிடையாது ! ..மெயின் துபாய் ஏரியாக்கு வந்தால் தான் சில தியேட்டர்கள் , ஒரிஜினல் வி.ஹெச்.எஸ் , கேசட்கள் வாங்கலாம்.. )
உதவி,அவசரம் என்றதால் போட்டது..போட்டபடி அவசர ,அவசரமா விரைந்தோம்.
வீட்டு பெல் அடித்தால் ,அவள் கதவே திறக்கவில்லை ..
இந்த பக்கம் வாங்க,என பால்கனி பக்கம் குரல் வர,அவள், இப்படியே வாங்க! என்றாள்..
விழித்தவாறே..நாங்கள் இருவரும் பால்கனி சுவர்(சிறியது ,க்ரவுண்ட் ப்ளோர் ) ஏறிக்குதித்து உள் சென்றோம் .
அவள் சுவரை வெறித்துப்பார்த்தவாறே ,
"எங்கம்மாவை எரிச்சாங்களே! அப்ப சுட்டிருக்குமா" என தூக்கிவாரிட, நாங்கள் (அவள் அம்மா,அவளது திருமணத்திற்கு முன் இறந்ததில் அவள் பாதிக்கப்பட்டிருப்பாள் என மனதில் நினைத்து ),ஆறுதல் கூறி ,குழந்தையை எடுத்து ,கையில் தந்து..மனதை தேற்றினோம்..
(வீட்டு சாவியை எங்கோ வை த்துவிட்டாளாம்,எழுந்துஎடுக்ககூடமுடியாமல்..எங்கள் பால்கனி எண்ட்ரி, வர சொன்னேதே அப்படி அவள் தான் !!)
"நீ எதாவது சாப்டியா ,வேணுமா " என்பதற்கு, "ம்ம்..அவர் ஆபிஸிலிருந்து ,வந்துடுவார் ,இன்னும் நா சமைக்கல " என்றாள்.
நாங்கள் ,இருவரும் இரக்கம் மேலிட..அவளிடம் கேட்டு,கேட்டு அவர்களுக்கு தேவையான மதிய உணவு ரெடி பண்ணி..வைக்கவும்
அவள் கணவர் உள்ளே வரவும் சரியாக இருந்தது..அதுவரை உட்கார்ந்திருந்தவள்..பட்டென எழுந்து...டைனிங் டேபிளில் தட்டுடன் அமர்ந்து,அவர்க்கும் பரிமாறி சாப்பிட்டு முடித்தாள் .
எங்கள் பக்கம் ,திரும்பி..
" உங்களுக்கு கொஞ்சம் கஞ்சி வச்சுத்தரட்டுமா" எங்களுக்கு(ஷாக்குக்கு மேல் ஷாக் ) என்ன சொல்வதறியாமல்.." இல்லம்மா! நாங்க ,வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறோம்" என்று விட்டால் போதும் என வந்தோம் ..நன்றாக வாசல் வரை வழியனுப்பினாள்.
" உங்களுக்கு கொஞ்சம் கஞ்சி வச்சுத்தரட்டுமா" எங்களுக்கு(ஷாக்குக்கு மேல் ஷாக் ) என்ன சொல்வதறியாமல்.." இல்லம்மா! நாங்க ,வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறோம்" என்று விட்டால் போதும் என வந்தோம் ..நன்றாக வாசல் வரை வழியனுப்பினாள்.
அவள் கணவருடன் ,அவள் நார்மலா பேசியதும்,அவரும்' எல்லாமே' நார்மலாக இருப்பதுவும் போல நடந்துகொண்டது...நாங்கள் நார்மலா??!! என்ற சந்தேகத்துடன் வீடு வந்து சேர்ந்தோம் ...
இது 12வருடங்களுக்கு முன் நடந்தது...அது புதிதாய் டெவலப் ஆகிக்கொண்டிருந்தப்பகுதி..MultiNationality Environment .
"உதவி செய்யபோய் உபத்திரவம்" ஆன சம்பவம்.
அதிலிருந்து அவள் போன் வந்தால் ...அலார்ட் ஆகிடுவோம்.
.
பின்னாளில் ..நிறைய பேர் அந்த பகுதியில் இதேபோல் அவளைப்பற்றி ..வெவ்வேறு அனுபவங்களைக் கூறக்கேட்டோம்...
பின்னாளில் ..நிறைய பேர் அந்த பகுதியில் இதேபோல் அவளைப்பற்றி ..வெவ்வேறு அனுபவங்களைக் கூறக்கேட்டோம்...
இன்னமும்..மறக்காத இந்த சம்பவம், இப்போதும் உதவி என யார் கேட்டாலும் இது நினைவிற்கு வந்துப்போகும் ..
smile emoticon smile emoticon
No comments:
Post a Comment