Monday 17 August 2015

திருமாலை அறிவோமா ...

திருமாலை
நாலாயிர திவ்யப்பிரபந்தம் 12 ஆழ்வார்களால் அருளப்பட்ட தமிழ் பக்தி இலக்கியம் , பன்னிரு ஆழ்வார்களில் , சோழ நாட்டில் பிறந்து திருவரங்கத்தில் பூ மாலையும் , பாமலையும் தொடுத்து பக்தி தொண்டு புரிந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார் !
இவரைப்பற்றி எழுதியது நம் நினைவிற்கொண்டு..அவர்தம் பாசுரம் காண தொடர்வோம்..!
திருமாலை - 10 .
நாட்டினாந்தெய்வமெங்
காட்டினான் திருவரங்கம்
உய்ப்பவர்க்கு உய்யும்வண்ணம்
கும் நல்லதோரருள்தன்னாலே
கேட்டீரோ நம்பிமீர்காள்! கெருடவாகனனும் நிற்க
சேட்டைதன்மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே !!
பாசுர விளக்கம் :
சேட்டைதன்மடியகத்து - ஜேஷ்டா தேவி - திருமகளின் தமக்கையார் - மூதேவியிடத்தில் (தரித்திரத்தைக்கொண்டவர் )
செல்வம் பார்த்திருக்கின்றீரே ! - செல்வம் வேண்டுமென யாசித்து இருக்கிறீர்களே !!
நாட்டினாந்தெய்வமெங்கும் - எல்லா இடங்களிலும் தெய்வங்களை -பல தேவதைகளை ஆங்காங்கே இறைவன் பல மக்களும் தொழுவதற்காக நிலை நிறுத்தியுள்ளான் .
(தான் சத்வமே வடிவானவன் -சாத்வீக சுபாவத்திற்கு ஏற்ற தெய்வம் )
நல்லதருள் தன்னாலே - தனது அருளால்..
உய்ப்பவர்க்கு உய்யும் வண்ணம் - முக்தி வேண்டுபவர்க்கு , அதை தரும் வண்ணம்
காட்டினான் திருவரங்கம் - திருவரங்கம் வாழும் அரங்கனை காட்டினான்...
கேட்டீரோ நம்பீர்காள் கெருடவாகனனும் நிற்க -
கருடனை வாகனமாகக்கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பற்றுங்கள் கேட்பீர்களா..!
விளக்கம்
ஆழ்வார் முந்தைய பாசுரங்களில் , பரமபத நாதரை பின்பற்ற கூறுகையில் அவ்ர் இருப்பது வைகுண்டம் அங்கு செல்வதும் , வழிபடுவதும் கடினம் என்பதால் ராமனை , கண்ணனை பற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்.
அதிலும் ராமன் , கண்ணன் வாழ்ந்த காலம் ஆழ்வார் காலத்துடன் வேறுபட்டதால் , எளிதில் பின்பற்ற வேண்டிய தெய்வமாக திருவரங்கத்தில் பள்ளிக்கொண்டிருக்கும் அர்ச்சாவதார மூர்த்தியாகிய பெரிய பெருமாளை குறிப்பிடுகிறார்.
மனிதர்களில் மூவகைகுணங்கள் ராஜஸ , தாமஸ , சாத்வீக என்பதற்கேற்ப , அவரவருக்கேற்ப தெய்வங்களை நிலைனிறுத்திருக்கிறார் பரம்பொருள் !
சாத்வீக குணமுடையவர் பற்றக்கூடிய தெய்வமாக இருப்பவர் கருடனை வாகனமாகக்கொண்ட மஹாவிஷ்ணு - அரங்கன் ..(மற்ற தேவதைகளின் மூலம் முக்தியை தருபவரும் அவரே ) !
அவரே மோட்சம் அருளுபவர் ஆவார் இவரை விடுத்து மற்ற தெய்வங்களிடம் முக்தியை வேண்டுவது
செல்வங்களை தரும் திருமகள் இருக்க , அவளின் தமக்கையான (தரித்திரத்தில் இருக்கும் ) மூதேவியிடம் செல்வம் யாசிப்பதற்கு சமம் என்கிறார்.
அடுத்த பாசுரம் காண்போம்.
தொண்டரடிப்பொடியாழ்வார் பாதம் பணிந்தே !!

No comments:

Post a Comment