Monday 20 July 2015

திருமாலை -5

பிரபந்தம் அறிவோம்..

பெண்டிராற்சுகங்களுப்பான் பெரியதோரிடும்பைபூண்டு
உண்டிராக் கிடக்கும்போது உடலுக்கேகரைந்துனைந்து
தண்துழாய்மாலைமார்பன் தமர்களாய்ப்பாடியாடி
தொண்டுபூண்டமுதமுண்ணாத் தொழும்பர் சோறுகக்குமாறே !!
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் தொண்டரடிபொடியாழ்வாரின் திருமாலை காண்கிறோம் இங்கேப்பதிவாக..சற்றே இடைவெளியில் மீண்டும்..என்னுடன் படித்து பயணிக்க வேண்டுகிறேன் !
தொண்டரடிபொடியாழ்வார் எழுதியவை ரெண்டு..ஒன்று திருமாலை & திருப்பள்ளியெழுச்சி ..திருவரங்கம் வாழ் அரங்கனைப்பற்றி எழுதியது..
இந்த பாசுர விளக்கம்..காண்போம்.
பெண்களால் கிடைக்கும் சுகங்களில் உழன்று வாழ்பவன் , பெரிய பெரிய துன்பங்களை தானே விரும்பி தன் தோளில் அணிகலனாய் அணிகிறான் .
இவன் உணவிற்காக பகல் முழுவதும் உழைத்து விட்டு இரவில் உண்டு அப்படியே உறங்க அந்த உடலுக்காகவே கரைந்தும் , நைந்தும் போகிறான்....
தம்மிடம் அடியார்கள் என்றே பணிந்த தம் பக்தர்களுக்காக அழகான வன மாலையை அணிந்து சர்வேஸ்வரனாக காட்சியளிக்கும் அரங்கனை..பாடி ஆடி , அவருக்கு தொண்டு செய்யும் அமுதத்தை உண்ணாமல்...வெறும் சோற்றை உண்டு வாழும் பாவியாக, வீணர்களாக வாழ்கிறார்களே !
இதில் ஆழ்வார்...காம சுகத்தால் எப்போதும் நன்மை விளைவதில்லை மாறாக..பகுத்தறிவு கொண்டு இறைவன் மேல் பக்தி கொள்ளுங்கள் என்கிறார் . உணவு , உடல் , காமத்திற்கு இடம் கொடாமல்..
நமக்காகவே வனமாலை தரித்த மார்பனாகிய அரங்கனை அடித்தொழ , அவர் நம் பாபங்களை ப்போக்கி..நம்மை உயர்த்துகிறார்..
இதை யறியாமல் வெறும் சோறு ண்டு , பாபிகளாக , நீசர்களாக வாழ்கின்றனரே ..என்று நம்பால் இரக்கம் கொண்டு உய்க்கும் வழி உரைக்கிறார்...

No comments:

Post a Comment