Thursday 21 January 2016

கிழிந்துப்போன தாரை தப்பட்டை

கலைவாணர் பேத்தி பாடகி ரம்யா , தனது டிஸ்கவரி தமிழ் சேனல் குழுவினருடன் சாமிப் புலவர்(ஜி.எம்.குமார்) என்ற கலைமாமணி விருதுப்பெற்ற 
வாயைத்திறந்தால்...கெட்டவார்த்தைகளால் கொப்பளிக்கும் நாட்டுப்புறக்கலைஞரை பேட்டி எடுத்து...இன்றைய கரகாட்டம் , முதலான நாட்டுப்புறக் கலைஞர்களின் உண்மை நிலையை எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கும் காட்சிகள்..
ஒரு சின்ன சுவாரஸ்யத்தையும் , கூடவே இயக்குநர் பாலா என்பதால்...பயமும் சேர்ந்த உணர்வுகளால் கட்டப்பட்டு ஸ்கீரினுடன் பேஸ்டாகிறோம்!
சன்னாசி , தனக்கென ஒரு குழுவினர் , நேர்மையான தவில், தப்பட்டை முதலான இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞனாக சசிக்குமார்.
கொடுத்த வேலையை திறமையாக வாசித்து குரு சொல் தட்டாத
..சன்னாசியாகவே வாழ்ந்திருக்கிறார்.
ஆரம்பத்திலேயே , யதார்த்தம் மீறி , அதிர்ச்சித்தரும் ஹீரோயினாக வரும் (வரலஷ்மி) வரு - சூறாவளி' சூரவல்லியாக சரக்குக்கேட்டுப்போடும் ..ஜி.எம் குமார் க்கு ஈடாக மது அருந்தும் , நடனம் ஆடும் பெண்ணாக அறிமுகமாகும் போதே பாலாவின் நடனமும் ஆரம்பமாவதை உணர்கிறோம்.
சற்றே ஜீரணித்து அடுத்தடுத்து காட்சிகளை எதிர் நோக்கிட , அரைகுறை ஆடையுடன்..ஆட்டங்களும் ஆரம்பமாக... என்ன மாதிரியான திரைப்படம்.. என யோசிக்கும் போதே , சன்னாசி மேல்..காதலுடன் , அந்தமான் க்கு கலை நிகழ்ச்சிப்பயணம் , என் மாமா பட்டினி கிடந்தா அம்மணமாக் கூட நா ஆடுவேன்...என்று சூரவல்லி கூறும்போது .. காட்சிகளில் ஒன்றிட..இசைஞானி ப்ளாஷ் ஆகிறார் இசையால்.
வரலட்சுமி யை கட்டாயப்படுத்தி , திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் சீனில்...ம்க்கும்..மாமா..மூன்று மாடுலேஷனில்...வரலட்சுமி..விசிலடிக்கவைக்கிறார் , இறங்கி , ஆடி , உருகி , அமைதியாகி... நடிப்பிலும்..இறங்கி ஆடியுள்ளார் வரு..ஆசம்..ஆசம் !!
யதார்த்தமான சீன் களுக்காக..ஆபாச வசனங்களை துணைக்கு சேர்த்து , வன்முறையை அப்பட்டமாக காமித்தப்படியே , இயக்குனர் பயணிக்க..சன்னாசியைக் காதலிக்கும் ஆக்ரோஷமான சூறாவளி..அடங்கிப்போய் , அடக்கமான வில்லன்..வெளித்தெரிவதுடன் இடைவேளை. அடுத்து என்னாகும் , என்ன ஆயிற்று - சூரவல்லிக்கு , அவர் தாயின் அழுகை மூலம்.. எதிர்பார்ப்பை விளைக்கிறார் இயக்குனர்.

வில்லனாக புதுமுகம் கருப்பையா வாக ஆர்.கே. சுரேஷ்.. , அதீத குருரம் கலந்த வில்லத்தனமான சீன்ஸ்.. (இவர் studio 9 media works - producer). அமுதவாணன், ஆனந்தி என சின்னத்திரை முகங்கள் , தந்த வேலை செய்து நடித்திருக்கின்றனர்.

ஏன் பாலா சார் ? உங்க அஸிஸ்டெண்ட்ஸ்ம் நல்ல கருத்துக்களோ..பெண்களின் மீது நல்ல அபிப்பிராயம் தரும் சீன்ஸ் உங்களுக்கு தர மாட்டாங்களா..இல்லை..இது தான் ..உங்களின்...யதார்த்தப்பொங்கலா ?? , இதற்கு மேலே பெண்களை..சீரழித்துக்காமிக்க அடித்தளம் அழகாப்போட்டுத்தந்து உங்களின் சமுதாய அக்கறையை அருமையாகக் காண்பித்துள்ளீர்கள் .

பலரையும்..மறைமுகமாக தாக்கி , இன்றைய கரகாட்டக் கலைஞர்களின் நிலையை.. எடுத்துச்சொல்ல வந்து அதீத யதார்த்தமும் , அளவுக்கு மீறிப்போய் முகம் சுளிக்க வைத்த இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும்.. வருத்தமான பாராட்டுகள்.

தவில் வித்வான் ஜி
எம்.குமார் , (எந்த தவில் வித்வான் , நாதஸ்வரம் வாசித்து பாடுவார் , எத்தனை அபத்தம் ??!! )
நாதஸ்வரத்துடன் பாடுவது , கரகாட்டக் கலைஞர்கள் ஒரு காட்சியில் கூட அதற்கான அடையாளங்கள் இன்றி..ஆனால் அவர்களுக்கான உடைகளுடன் வருவது, காயத்ரி ரகுராமை ஆபாசமாக ஆடவிட்டு
ஓவர் அலப்பறை தந்து..சாவு வீட்டில் ஆடுவதுப்போன்றக் காட்சிகள்..தேசிய விருதுப்பெற்ற பாலா வா டைரக்டர் என முகம் சுழிக்க வைத்து ஆச்சர்யத்தில் அறைகிறது நம்மை.

இளையராஜா அவர்களது இசையாட்சியால் , பலக் காட்சிகள்.. பின்னணி இசையால்..மிளிர்கிறது..ஒப்பற்ற இசைக் கலைஞன் என மனம் இறுமாப்பில் இருக்க
பாடல்கள்..மனதில் ஒட்டாமல், கேட்ட ஸ்வரங்களாக தோன்றுகிறது.

செழியன் .. கேமிரா யதார்த்தத்தையும் , பிரமாண்டத்தையும் சேர்த்துக் காண்பிக்கிறது.
எடிட்டர் G.சசிக்குமார்

ஆர்ட் டைரக்டர் , காஸ்ட்யூம் டிசைனர்கள்..தத்தம் வேலைகளில் தெரிய , பாலாவுடன் இணைந்து சசிக்குமாரும் தயாரிக்க..ஐங்கரன் இண்டர்நேஷனல் வெளியிட்டு..இளையராஜா 1000 என்ற பிராண்டுடன் வெளிவந்து தாரை தப்பட்டை - பாலா அவர்களின் யதார்த்தங்கள் என்ற பெயரில் மன வக்கிரங்களை..கிழித்துத்தொங்க விட்டுள்ளது.
( A சர்டிபிகேட்டுடன் வெளிவந்துள்ள திரைப்படம் , இளகிய மனமுள்ளவர்கள் குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கலாம் )

No comments:

Post a Comment