இறைவி ..
கார்த்திக் சுப்புராஜின் பீட்சா, ஜிகர்தண்டா விற்குப்பின் women க்காக என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை விதைத்தவள் இறைவி..இசைக்கிறாளா ??! மணக்கிறாளா ?
மழை.. மூன்றுப்பெண்கள்.. ஒரு மையப்புள்ளியில் இவர்கள் இணைவது என ஆரம்பிக்காட்சிகளில் , ஆர்வம், அடிதடியில் மைக்கேலாக விஜய் சேதுபதி , சிலை செய்யும் புகழ்பெற்ற சிற்பியாக அமைதியான ராதாரவி.
பப்ல்..இளையராஜா வின் இசையுடன் எஸ் ஜே சூர்யா..தன் திரைப்படம் வெளிவராமல் முடங்கிக்கிடக்கும் அருள் தாஸாக ..தண்ணியடிக்கும் காட்சிகள்..அதனைத்தொடர்ந்து.. அவர் தம்பி பாபி சிம்ஹா பைட்.. ஆள் சேர்த்தல் , பாட்டு என புதுமையைக்கையாள முயற்சித்து..மெகாத்தொடர் ஆரம்பமாவதற்கு அறிகுறியாகப்படுவதால்..இருக்கையில் சாய்கிறோம் நாமும்.
எஸ் ஜே சூர்யாவின் படம் ஈகோ பிரச்சனை வெளிவராமல் இருக்க..அவர் மதுக்கு அடிமையாவதும் , அதனால் குடும்பம் படும்பாடு , கிரேஸி சீனு மோகன் குடும்பத்தில் ஒருவராக பழக அவரது அண்ணன் மகனாக விஜய் சேதுபதியும்
சூர்யாவின் தம்பியாக , பாபி சிம்ஹாவுடன் இணைய திருமணத்திற்கு முந்திய பழக்கமாக பூஜா சாவேரியாவுடனான பழக்கமென டைரக்டர் என்னதான் சொல்லவருகிறார் என யோசிக்கும்போது..
அஞ்சலி திருமணம், சூர்யாவின் படம் மீட்கும் முயற்சி என கமலினி முகர்ஜி முயற்சிக்க சரி..படம் இந்த லைனில் ட்ராவல் ஆக இருக்கும் என எண்ணும் போது..சிலைதிருட்டு..கடத்தல் என..
கதை கட்டைவண்டியில் பயணிக்கிறது.
நர்ஸ் வந்து எச்சரிக்கும் போதும் , சிலை திருடும் சீன்களிலும் அதிரி புதிரி லைக்ஸ் !
இடைவேளைக்கு முன் யூ டர்ன்களை வைத்து வேற லெவலோ என நினைக்கும்போதே டிஸ்லைக் செய்து கதை திரும்ப பழைய ட்ராக்கில் பயணிக்கிறது.
வி.சேதுபதி
சிறையில் வெளியாகும் காட்சிக்கு முன் கைதியின் சட்டை விழுவதும் , அவர் சூர்யாவுடன் கிளம்பும் காட்சியில்..பொம்மை சுழன்று..கவிழ்வதும் நல்ல மேக்கிங் !
அஞ்சலி அழகு..சிம்பிள் எக்ஸ்ப்ரெஷன்களில் அள்ளுகிறார் !!
கமலினி முகர்ஜி நாள் கழித்து வந்தாலும் அழகாக தெரிய .. கவராமல் , ஆனால் பூஜா தேவரியா ரசிக்க வைக்கிறார்.
எஸ் ஜே சூர்யாவின் கலந்துக்கட்டின நடிப்பு , குறிப்பாக க்ளைமேக்ஸ் சீன் , பப் சீன் , மனைவியிடம் அழும் காட்சி ,
குழந்தைக்காக சூர்யா- கமலினி ஒன்றாக எழும் காட்சிகள் ஆசம் ..!! பாராட்டுகள் !!
விஜய் சேதுபதி வழக்கமான தாடியில்..எமோஷன்களில் தெறிக்கிறார்.ஆனால் வேற பீலோ..புதிதாகவோ இல்லையே !
பாபி சிம்ஹா, கருணாகரன் ..அவரவர் வேலைகளில் பளீச் !
பல திரைப்படங்கள் வந்த இயக்குனர் ஒரு படத்திற்காக இப்படி மதுக்கு அடிமையாவாரா ? நடுவில் DVD விளக்கம் வேறு..! அவரை முன்பே ஒரு டீ அடிக்ஷன் செண்டருக்கு அழைத்துப்போக மாட்டாரா மனைவி ? காதல் மனைவியால் முடியாததா ! அத்தனை ஆணாதிக்கம் கொண்டவராக காண்பிக்கப்படவில்லையே !
காளிவெங்கட் கதையில் காணாமல் போக ,
கொலை , திருட்டை நியாயப்படுத்தும் காட்சிகள் என
ரோலர் கோஸ்டர் கதையில்..
இசை சந்தோஷ் நாராயணன்.. எதிர்பார்த்த இடங்களில்..அடக்கிவாசிக்கும் பின்னணி இசை..செகண்ட் ஹாஃப்பில் சரியாகிறது !
பாடல்கள்..வி.சேதுபதி குரலில் வரும் பாடல் ஒகே. அந்த சூர்யா மனைவியை காதலிக்கும் பாடலில்..குரல் ஒன்றாமல்... இசைமட்டுமே ரசிக்க வைக்கிறது.
காஸ்டியூம்ஸ் , ஆர்ட் டைரக்ஷன் என அனைத்தும் பக்காவாக இருக்க..யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன.
கேமிரா சிவக்குமார் விஜயம்..கைகள்..பப்.. குடிசை வீடு.கட்டில் , சிற்பக்கூடம் என அழகாக அலைந்து நம்மையும் கட்டிபோடுகிறது.
நல்லவனா கெட்டவனா என கேட்க வைக்கிறது தெளிவற்ற பாபி சிம்ஹாவின் கேரக்டர்.
அத்தனை கொடூரமான மறுவாழ்வு மையமா..கற்பனைக்கும்..யதார்த்தத்திற்கும் நடுவில் இழுபறி காட்சிகள் !
பெண்களை அழவைக்கக்கூடாதென்பதாக பாபியின் குரலில் கார்த்திக் சுப்புராஜ்..முடிலடா சாமீ என வைக்கிறார்.
கூடவே மழை..மழையில் நீட்டும் பெண்ணின் கைகள்..நனைவோமா.வேணாம் நனைஞ்சுடுவோம் என காட்சிகளில் மட்டுமே பெண்மையை உயர்த்திப்பிடிக்கிறார்..ஆனால்..அழுத்தமில்லை !!
நான் ஆண் ..பெண் என வசனங்களில் வெறுப்பே மிஞ்சுகிறது !
.அவ்வப்போது இறைவி..எனும் தலைப்பிற்கேற்ப பேசி..குடி..குடியை கெடுக்கும்..சப்டைட்டிலை எடுக்காமல் படம் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் !
பெண்மையை சிறப்பிக்க ஆண்களின் ஈகோவைக்காட்டி..சுர்ர்ன்னு தலைக்கேறினா கோபத்தில் இப்படித்தான் என நியாயம் கற்பிக்கும் காட்சிகள் பொருந்தாமல் மகேந்திரன் ஸ்டைல் மேக்கிங் ல்..நம்பிப்போனவர்களுக்கு அவர்ப்பட டிஸர் போல ..உள்ளப்படம் இந்த இறைவி !
குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது !
எண்டெர்டெயின்மெண்ட் படங்களுக்கு வெகு தொலைவில் நிற்கும் இறைவி...தெளிவில்லாமல் ஜவ்வென இழுத்து..மனதில் பீடத்தில் அமர மறுக்கிறாள் !
இறைவி - ஈர்க்கவில்லை.
#சுமி_சினிமாஸ்
No comments:
Post a Comment