Friday 19 February 2016

ஆசை நூறுவிதம் , ஹ்ம்ம்ம் ! யாரை விட்டுருக்கு !!

சின்னவயதில் எங்கள் காலனி குடியிருப்பில் வாசலில் அந்தப்பகுதியில் இருந்த சிறு தெய்வத்திற்கான திருவிழாவின் போது , அதேதான் வீடு வீடாக பணம் கலெக்ட் செஞ்சு ,

முதலில் சாமி ஊர்வலம் என ஆரம்பிச்சு , கரகாட்டம் , ஆர்க்கெஸ்ட்ரா ந்னு விடிய விடிய நடக்கும் ! ஜஸ்ட் நின்னுப் பார்த்துட்டு வந்துடணும் ! சேர் போட்டு உக்காந்துப்பாக்கல்லாம் ஆசைப்படக்கூடாது ..

அப்பா ஸ்ரிக்ட் ஆபீசர். மனதுக்குள் அப்பாவை திட்டினாலும் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு வந்துடுவோம் !

நள்ளிரைவைத்தாண்டியும் ஸ்பீக்கரில் எல்லாம் கலந்துக்கட்டிப் பாட்டுகள் கேட்கும் , குத்து மதிப்பா இந்தப்பாட்டுதான் நினைச்சுக்கிட்டே தூங்காமல் ..சத்தம் போடாமல் எழுந்துப்போய் பாத்துட்டு வரலாமான்னு தோனிருக்கு ம் சரி அதுக்கென்ன இப்பங்கறீங்களா ! இருக்கே !


போன வகேஷனில் , திருச்சிப்போயிருந்தப்போது அப்பா அம்மாவுடன் ஷாப்பிங் போயிட்டு சத்திரம் பஸ்ஸ்டாண்டில் அப்பா பெஸ்ட் ஹோட்டல்ன்னு சர்பிகேட் செய்ததில் சாப்பிட்டுவிட்டு
(சமைக்கும் இடத்தையும் , டேபிள் க்ளீனிங் முறையையும் பார்த்து கண்கள் வேறப்பக்கம் பாக்க ஆரம்பிச்சுடும் ஆட்டோமேடிக் ஆ  ! :) )

வெளியே வந்தவளை பளீச்சுன்னு எதிரில் இருந்தப் பெண்மணி அட்ராக்ட் செய்தார் கையில் மைக்குடன் !

எதோ கட்சி மீட்டிங் போலருக்கு ! எங்க நல்ல நேரம் பேச்சு முடிஞ்சு ஆர்க்கெஸ்ட்ரா ந்னு பின்னாடி பேனர் ஆட ஒரு மொபைல் மேடை , பக்கத்தில் நாலு ஸ்பீக்கர் , முன்னாடி ஒரு 60, 70 சேர்கள் ந்னு களைக்கட்டியிருந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தலைகள் முளைத்திருந்தது !

அப்பவே உஷாரகிருக்கணும் ! இல்லையே ஆசை யாரை விட்டது !
அப்பா அம்மாவைப்பார்த்து , ஆர்க்கெஸ்ட்ரா இப்பதான் ஆரம்பிக்கிறாங்க போலருக்கு , கொஞ்சம் பார்த்துட்டுப்போகலாமே என்றேன் !
பொண்ணு " என்னம்மா ! அப்படின்னா "
ந்னு விளக்கம் கேட்க ஆரம்பிக்க அம்மா டபுள் ஓகே ந்னு தலையசைத்தார்..

ஆஹா !! அம்மாவும் நம்மைப்போல  ! பாவம் அப்பா , எத்தனை ஆர்க்கெஸ்ட்ரா பாக்க விடாமல் கூட்டிட்டு வந்துருப்பார்ன்னு மனசுல நினைத்தப்படியே ! நீ கவலைப்படாதம்மா ! நான் இன்னிக்கு உன்னப்பாக்க வைக்கறேன் ந்னு ஒரு பெருமை லுக் விட்டு ! நல்ல இடம் பார்த்து உட்கார்ந்தோம் !

அப்பா ஸ்ட்ரிக்ட் ஆபீசர் லருந்து... கைண்ட் ஆப்பீசர் மோட் க்கு மாறிருந்த நேரம் அது !

நேர்மையா எச்சரித்தார் ! சொன்னாக்கேளு வேண்டாம் ! இப்பவே மணியாச்சுப்போய் தூங்கலாம் ! ந்னு !
கேட்கலையே ! ம்ஹூம் ! எல்லாம் போகலாம் ப்பா ந்னு !
ஊன்றிப்பார்க்க ஆரம்பித்தேன் !

முதலில் எதோ ஒரு சுசீலா பாட்டு ஆரம்பித்தார் . சரி ஒரிஜனல் பாட்டை கூடிய சீக்கிரம் பாடிடுவார்ன்னு ஒரு நப்பாசை !

இல்லையே ! சரி , அடுத்தப்பாட்டு ..அடுத்தப்பாட்டு ! பாட்டுடன் நேரமும்  நகர்ந்தது .ஆனால்.அந்த மேடம் அவர் பாட்டுக்குப் பாடிக்கொண்டிருந்தார் கண்களை மூடிக்கேட்டாலும் கொஞ்சங்கூட மேட்ச் ஆக மறுத்தது அதே பாடல்கள் அதே ஸ்ருதியில்! அட ! கஷ்டகாலம் குரலாவதுன்னா ! அனந்த் வைத்தியனாதன் தேவையில்லாமல் நினைவுக்கு போனார், ஜிகுஜிகு சூரிதாரில் , கழுத்தில் நீளமான மாலைகளும்  !

திரும்பி அப்பாவைப்பார்த்தேன் ! உனக்கு இது தேவைதான் என்பதுப்போல் இருந்தது அவர் பார்த்தப்பார்வை !டொய்ங்க் !

அம்மாவும் "இல்ல..வேற சிங்கர் பாடறார் ! அதாவது ! ...ப்ளீஸ் வெயிட்! "  என்பதுப்போல் பார்த்தார் . சரீ...ஆறு மனமே ஆறு !! ந்னு மனச ஆத்திட்டுப்பார்த்தால் ..அடுத்தடுத்து வந்தவர்களும். ..மேற்சொன்ன ஸ்ருதி , ராகம் பற்றியே பிரக்யையையே இல்லாமல் வந்த வேலையை செவ்வனே செய்தப்படி இருக்க ! இனி தாங்காது , விட்டால் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் சித்ரா தேவி(காஜல்) கிட்ட சண்டைக்குப்போன கார்த்தி ஆகிடுவேனோன்னு ஒரு பயம் எழ நானும் எழுந்தேன் ! (சும்மாவா படம் எடுக்கறாங்க ! நடக்காமலா எடுக்கறாங்க  ?? :) ) !

அம்மாவைப்பார்க்க பாவமாக , "ஆமா! இப்படித்தான் இருக்கும் போலருக்கு ! " சன்னமானக் குரலில் எனப்பார்த்தப்படிக்கூற அப்பா இப்பப்போதுமான்னு பார்க்க..நான் ஆட்டோவைத்தேடினேன் , வழிக்கூறி...ஆட்டோவிலும் ஸ்பீக்கரில் கேட்டப்படி இருந்தது அவர்கள் பாடல்கள்...நான் மட்டும் கப்சிப் !

(பின்குறிப்பு : படமாவது நல்லாருக்கட்டுமேன்னு கடன் வாங்கிருக்கிருக்கேன் கூகிள் மஹராசாட்டருந்து :P )

No comments:

Post a Comment