Friday 4 September 2015

கண்ணனை பணி மனமே

ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் அனைவருக்கும் ,
நெருக்கமும் , சிறப்பானதுமான பாண்டவ தூதனாக , கீதையின் நாயகனாக வந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !
பக்தியில் பலவகை. அதில் ஒரு வகை , தாயாய் அன்புக்கொண்டு பக்திக்கொள்வது !
அப்படி தாயன்பால் ஆதியும் அந்தமுமற்ற இறைவனைப்பாடியவர் பெரியாழ்வார் .
ஸ்ரீவல்லிப்புத்தூரில் அழகான நந்தவனம் அமைத்து , வடப்பெருங்கோயிலுடையானுக்கு (வடபத்ரசாயி) பூக்கள் பறித்து , தொடுத்து மாலையாக்கித்தந்த இறைத்தொண்டு செய்துவந்தவரின் தாய் தந்தையர் இட்டப்பெயர் விஷ்ணுசித்தர் .
அப்போது மதுரையை ஆண்ட ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னனுக்கு ஒரு ஏழை அந்தணனது இனி பிறவியல்லா வாழ்வும் , பர லோகமும் செல்ல , இப்பிறவியிலேயே அதற்கான முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற வாக்கியம் மிகுந்த யோசனையில் ஆட்படுத்த , அதற்கான விளக்கமறிய , தன் புரோகிதர் செல்வ நம்பியை கேட்க , செல்வ நம்பி , ஒரு சபையைக்கூட்டினார் .
அதில் வேதங்கள் கூறும் பரம்பொருளான தெய்வம் யாரென்றிய விவாதங்களை நடத்தினார் .
பூத்தொடுத்து , தொண்டில் ஈடுபட்டு வந்த விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றிய பெருமாள் ,
" நாளை மன்னனின் சபையினில் சென்று பர தெய்வம் யாமென்று நிலை நாட்டி வருக ! " , அதிர்ந்த பெரியாழ்வார் ,
" எனக்கு பூ தொடுப்பதை தவிர வேறென்றும் தெரியாதே , எங்கனம் நிரூபிப்பேன் " என்கிறார் .
" இதுவும் நீங்கள் செய்வதாக நினைப்போ! யாம் அல்லவோ நிறைவேற்றுகிறோம் ! " என்று தனது லீலையை ஆரம்பிக்க ,
இறைவனது ஆணைப்படி பாண்டியனின் சபைதனில் , துருபன் , வால்மீகி போன்று இறைவனாலே வேண்டிய அருள் ஆற்றலைப்பெற்று , வேதங்கள் , ஸ்மிருதிகள் , இதிகாசங்கள் , புராணங்களில் இருந்து மேற்கொள்கள் காட்டி , ஆதியும் அந்தமும் அற்ற தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே என்று நிலை நாட்டிட ,
அங்கே மேலே தொங்க விடப்பட்டிருந்த பொற் கிழி ( பொற்காசுகள் கட்டிய பை) இவர் உரைத்ததே சத்தியம் என்று விஷ்ணு சித்தரின் மீது பொற்காசுகளை பொழிந்தது .
மகிழ்ந்த அரசன் , யானையின் மீது ஊர்வலமாக , பல பரிசுப்பொருட்களுடன் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அனுப்பி வைக்கிறார்.
வென்று பரிசிலுடன் வரும் ஆழ்வாரைக்காண கருடனின் மீது , இறைவன் தோன்றிட வீதியில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்ய , இறைவனை வானில் கண்டு ..
வணங்கி ட , உடனே, எங்கே இறைவனுக்கே கண்படுமோ ! என்றெண்ணி , யானையின் கழுத்திலிருந்த மணியைக்கொண்டு , பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று இசைத்தப்படியே பாடுகிறார் .
அப்போது பெரியாழ்வர் என இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் பெரிய திருமொழி இயற்றுகிறார். 473 பாடல்கள் !
கண்ணனை குழந்தையாக , அவர் பாடிய ..
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்து சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரோ பவளவாயீர் ! வந்துக்காணீரோ !
பாசுர விளக்கம் :
பவளம் போன்ற சிவந்த வாயினைக்கொண்ட
பெண்களே ! வாருங்கள் !
தன் திருவடியில் தேன் இருப்பதைப்போன்று தன் கால் விரல்களையேவ்வாயிலிட்டு சப்பும் , இந்த தேவகி பெற்ற இக்கண்ணனின் அழகைப்பாருங்கள் !
என்று யசோதையே , கண்ணனின் அழகைப்பார்த்து , விரல் சப்பிடும் குழந்தையைப்பாடுவதுப்போல ஆழ்வார் பாடுகிறார்.
இன்னொன்றில் ..
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!
பாசுர விளக்கம் :
நவரத்தினங்களில் ஒன்றும் சிவப்பானதுமான மாணிக்கத்தைக்கட்டியும் , நடுவில் வைரத்தை வைத்தும் சுத்தமான பொன்னால் ஆன அழகிய சிறிய தொட்டிலை பிரம்மன் விரும்பி உனக்காக அனுப்பினான் . பிரம்மச்சாரி வடிவில் வாமனனாக அவதரித்து , உலகை அளந்தவனே தாலேலோ !
என்று தானே கோபியர் பெண்களில் ஒருத்தியாக  எண்ணிக்கொண்டுப் பாடுகிறார் !
கண்ணனை தொட்டிலிட்டு தாலாட்டி , சந்திரனை அழைத்து , குழந்தைக்குக்காட்டி , குழந்தையின் தொட்டிலை அசைத்தாட்டவும் பாடியிருக்கிறார் பெரியாழ்வார் .
குழந்தையாக கண்ணனை கைக்கொட்டி அழைத்தல் , அணைத்துக்கொள்ள ஆசைப்படுதல் , கண்ணனை முதுகிற் கட்டிக்கொள்ளும்படி அழைத்தல் என அத்தனை உணர்வுகளையும் பாடல்களாக்கியிருக்கிறார்.
கண்ணனை குழந்தையாக பாவித்து , பாடிய தாயாக மாறிய பெரியாழ்வரின் பக்தி மெய் சிலிர்க்கிறது !
பல பேரண்டங்களை படைத்தவன் அவதரித்த தினத்தில் பெரியாழ்வார் பாதம் பற்றி , கண்ணனைப்போற்றுவோம் 

No comments:

Post a Comment