Sunday 3 April 2016

ஜீரோ .. பல்பு

ஜீரோ...

பூஜ்ஜியத்தில் தொடங்குவதாக சொல்ல ஆரம்பித்து..இது சூப்பர் நேச்சுரல் படமென்றதும்..எதுவும் ஆரம்பிக்கலையே என நினைக்கும் போது ஆரம்பமாகிறது .

அட்வகேட் ரவிராகவேந்திராவின் ஒரே மகன் அஸ்வின்.. அப்பாவிற்கு விருப்பமில்லாமல் ஷிவ்தாவை திருமணம் செய்துக்கொள்கிறார்.

பல படங்களில் பார்த்த அதே புதுமண தம்பதிகள் காட்சிகள்.. திடீரென்று ஆழ் நிலை தூக்கத்தில்.. ஹீரோயின் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்
.கதையும் நகர ஆர்ம்பிக்கிறது. அன்றுதான் பக்கத்துவீட்டு பெண்மணி துளஸியிடம் தன் வாழ்க்கைப்பற்றிக்கூற..அதன் பாதிப்பாக நாம் உணர.. அட என்னமாதிரியான படம் ப்பா இது என ரைக்டர் நம் பொறுமையை சோதிக்க..

ஷிவ்தாவின் பிங்க் கலர் ஆசைகள் அதிகமாக அவர் அம்மாவின் கைப்பிடித்தலுடன் அடிக்கடி வேற உலகிற்கு செல்ல..நாமும் சலிப்பின் உச்சத்திற்கு ..

ஆவிகளை உணரும்..பேசும் விஷேஷ சக்தியுடையவராக (JD)சக்ரவர்த்தி (அப்பப்ப தமிழிலும் தலைகாட்டுகிறார்) மனைவியுடன் பேசுவதாக அவரும் தன் பங்குக்கு சோதிக்கிறார் .

டாக்டராக ஷர்மிளா .. வேற என்னவோ ..இது..உன் வொஃபை அழைச்சிட்டுப்போ எனும்போது மனைவியை உணர்கிறார் ஆக்ஸிடெண்ட் மூலம் ஹீரோ.
.
மனைவிக்குள் உள்ள பேயா இல்ல எதாவது சூப்பர் நேச்சுரல் பவரா என்பதைக் காட்டி எப்படி மீட்கிறார் என்பதே புதுமுக இயக்குனர் ஷிவ் மோஹா வின் இயக்கத்தில் ஜீரோ !

அஷ்வின் வளர்ந்து வரும் கதாநாயகன் , கொடுத்த வேலையை சிரி(ற)ப்பாக..செய்ய..தாடியைமட்டும் கொஞ்சமும் சிரமப்படாமல் ஒட்டிக்கொண்டு பாதிப்படம் வருகிறார்.(ஏன் சார்..அவங்கங்க
.உடம்பை ஏத்தி இறக்கி என்ன்னென்ன்வோ மெனக்கெட..நீங்க இதுக்கூட செய்யாமல்..!! )

மனைவியாக ஷிவ்தா முதலில் அழகாக பின் அழுது.. கத்தி, முறைத்து, உருண்டு புரண்டு இயக்குனர் தந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

அவரது தாய் வரும் காட்சிகள்..முதலில் மன பிறழ்வு சைக்காலஜிக்கல் கதைப்போல நகர்ந்துப்பின் அமானுஷ்யத்தைப்புகுத்தி..கடைசியில்..தொட்டதும் பறக்கும் விதமாய்...அப்பப்பா ஏகப்பட்ட குழப்பங்கள்..! மைனஸ்கள்..! படம் ஆரம்பித்து 20 நிமிடங்களுக்குள் கதையை உணரவைக்க இயக்குனர் தவறிப்போகிறார்.

லிலித் எனும் ஆதாம் ஏவாள் கதைதானா  கிடைத்தது ஷிவ்மோஹ் !!

இதில் ..பல வித உணர்வுகளையும் பிரதிபலிக்கும் நிவாஸ் கே ப்ரசன்னாவின் பின்னணி இசை..எடிட்டிங் சுதர்ஸன் பாராட்டப்பட வேண்டியவர்கள். இயக்குனர் சொன்னதை உணர்ந்து தம் வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள் !

கௌதம் வாசுதேவ மேனனின் குரலில் ஆரம்பித்து..முடித்து புது முயற்சியாக வந்திருக்கும் சூப்பர் நேச்சுரல் படம் இந்த ஜீரோ..

அருகில்..1 ஐ இணைக்காமல்.. வெறும் பூஜ்ஜியமாக மட்டுமே திரைப்படம்.

#சுமி_சினிமாஸ

No comments:

Post a Comment