Friday 24 June 2016

தாசா..கண்ணதாசா ! கண்ணணனுக்கு மட்டுமல்ல ..நல்ல கண்களுக்கும் தாசா !!

கவியரசர் கண்ணதாசன்..


இவர்
அண்ணாந்துப்பார்க்கும் சூரியன் !!
இவரது
கவிதைகளை படிக்கும் போது குளிர் நிலா..!!
****
என் போன்ற கவிதை என்ற பெயரில் கிறுக்குபவர்களுக்கு வாய் பிளக்க செய்யும் ஆசான் !
தாத்தன் கண்ணதாசன்
(ஜூன் 24 ,1927) பிறந்தது தேவக்கோட்டை அருகில் ..
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள்,ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள்,நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.
அரசவைக்கவிஞராக இருந்தவர்.
சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
இத்தனை எழுதியும் அர்த்தமுள்ள இந்து மதம் மூலம்..ஆத்திக -நாத்திக -ஆத்திக பயணத்தை அறியச்செய்தவர் !
யார் யாரோ வாழும் பூமியில் ...
இந்த அரசனும் வாழ்ந்திருந்தால் என்ன , கண்ணே கலைமானே கடைசி பாடலாக அமையாமல்..இன்னம் இன்னமும்..ரசிக்கும் அமுது படைக்கும் கவியன்னையாக அமைந்திருப்பாரே ..
காலனுக்கும் ஆசை அருகில் அமர்த்தி பாடல் கேட்க..!
அழைத்துக்கொண்டான் அவசரமாக !
ஆரம்பத்தில் , இசையில் ஆழ்ந்தவள் வளர்ந்த பின் .. வரிகளில் ஆழ்ந்துப்போனேன் !
எத்தனை எத்தனை பாடல்கள்..
தேன் துளிகளில் எந்த துளி இனிப்பு என்பதாகும் அவர் பாடல்கள் !
* காதல் சிறகை காற்றினில் விரித்து ..அதில் பிரிந்தவர் சேர்ந்தால் கொஞ்சம் நிம்மதி..
* பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது-கருடா செளக்யமா? யாரும்
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்! உன்
நிலைமை கொஞ்சம் இற‌ங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்!
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு- ஒளவை சொன்னது
அது- ஒளவை சொன்னது!
அதில்- அர்த்த‌ம் உள்ள‌து...
அப்பப்பா..எத்தனை எத்தனை உண்மைகள் !!
கவிஞர்களுக்கு..வானமும் வசப்படுகிறது கருத்து மெய்ப்படுவதால்..!
என்றும் இவர் பெயர் கூற கண் கலங்கிடும் மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வ நாதன் அவர்களும்..
பிறந்த தினம் இன்று..
நட்பால் இணைந்தவர்கள் , இசை சகாப்தம் படைத்தவர்கள் , இருவரும் பிறந்த தினங்களும் ஒன்று..
தமிழ் உள்ள வரை , உலகில் சப்தம் உள்ள வரை இவர்கள் தம் புகழும் அழியாமல் நிலைத்து இருக்கும்..!

No comments:

Post a Comment