Monday 28 March 2016

ஏனோ...பயம் !!

சில பயணங்கள் சில நிமிடங்களே நீடிக்கின்றன ஆனால் 
அதன் தாக்கம் பல நாட்கள் நீடிக்கின்றன ! 

காரணம் காணும் காட்சிகளோ , பெறப்படும் அனுபவங்களோ , அதை தருபவர்களாகவோ இருக்கக்கூடும் ! 

தனியான எனது பயணங்களில் அதிகம் என்னால் சுற்றுப்புறம் கவனிக்கப்படுவதாக உணர்வதுண்டு .

சமீபத்தில் , ஒரு மெடிக்கல் செக்கப் பிற்காக , துபாயின் பெரிய மருத்துவமனைக்கு செல்ல , சாலையில் இறங்கியவளுக்கு சற்று பொறுமையை சோதித்தப்பின் ஒரு டாக்ஸி கண்ணில் புலப்பட்டது .

ஏறியதும் உடன்செல்லுமிடம் சொல்வோம் ..முடியாது எனில் முன்பே டாக்ஸி டிரைவர்கள் மறுத்துவிடுவர் .இது ஆனால் மிக அரிதாகவே நடக்கும்..ப்ரேயர் சமயங்களில் , சிலர் நீண்ட தூரம் வர விரும்பாதவர்களாலும்..! சரி விஷய்த்துக்கு வருகிறேன் !

என் டாக்ஸி டிரைவர் , வெள்ளை சீருடையில் , கார் ஓரளவு சுத்தமாக பராமரிப்பவராக , டிசெண்டாகவே தென்பட்டார் .

கொஞ்சம் ஆங்கிலம் தகராறு என்பதும் முதலில் பேச ஆரம்பித்ததுமே என்னால் உணர முடிந்தது. கொஞ்சம் தூரம் சென்றதுமே , கார்கள் தேங்க டிராபிக் ஆரம்பித்தது .

வழக்கம் போல்...மலையாளியா ?? என்றார் !

இல்லை , நான் சென்னை என்றதும் . ஓ. ஒகே என்றவர் , இத்தனை ட்ராபிக் ஜாம்..ம்ம். இங்கு அதிகம் இந்தியர்கள் தான் என்றார்.

நானும் இவர் என்ன தான் சொல்ல வருகிறார் என காதுகளை தீட்ட ஆரம்பித்தேன் , கண்கள் மட்டும் சாலையில் கடக்கும் கார்களையும் , மனிதர்களையும் விழுங்கியபடி இருந்தது.

இங்குள்ள மக்கள் தொகையில் நீங்கள் தான் அதிகம் உள்ளீர்கள் என்றார் ! அப்போது யார் இவர் ந்னு பார்த்தேன் ! இள வயது , சிவந்த நிறம் , கூர்மையான நாசி , நேர்த்தியான உடையமைப்பு , காரோட்டிய விதம் எல்லாமே சரியாகவே பட்டது. பின் ?!

நானும் , இல்லையே ..இப்போது எல்லா நாட்டினரும் உள்ளனரே ! என்றிட அடுத்த கேள்வி ...
சென்னை..கேரளா நெக்ஸ்ட் ..நெக்ஸ்ட்..??

யெஸ்..!

மும்பை...?

மும்பை ..மகாராஷ்டிராவின் கேப்பிட்டல் சிடி !

ஓ..! ஆனால் அது பெரியது ..!மக்கள் தொகை அதிகமில்லையா ??

ஆமாம்.

உத்தர்பிரதேஷ் ?? இதுதான் பெரியது இல்லையா !

எனக்குள். ஏன் இத்தனை விரிவாக கேட்கிறார் ?! கேள்விப்பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.

நானும். . இருக்கலாம் ..ஆனால் மத்திய பிரதேஷ் , பீகார் எல்லாமே பெரிது தான் ஏன் ,எங்க தமிழ் நாடும் ..இந்த நாட்டை விட பெரிதாச்சே...

(ஏனோ . நாம் ஏன் எல்லா டிடெயிலும் தரணும் என மனம் மக்கர் செய்தது .)

ஆங் .இப்போ அங்க தானே வெள்ளம்...!

அட , பரவால்லயே !! யெஸ்..யெஸ் என நானும் ஆமோதிக்க..

அப்படின்னா. மும்பை பெரிதா இல்லை , உத்தர் பிரதேஷ் பெரிதா ??

உத்தரபிரதேஷ் தான் பெரியது.. ! இது நான் ...

ம்ம்...அதான் நானும் கேட்கிறேன் ...பேசியவிதம் எதோ சரியில்லை எனப்பட்டது tongue emoticon

நான் வெளியில் இறங்குமிடம் பார்க்க ஆரம்பித்தேன்!

பட்..Mumbai யும் பெரிது தான்.. ம்ம். !! என்றிட...

இறங்குமிடம் வந்ததும்..பணம் தரும் போது எச்சல் விழுங்கியப்படியே கேட்டேன் ..

நீங்க ??!

பாகிஸ்தான் ...

எதிர்பார்த்த பதில் வந்து விழுந்தது..

நன்றி சொல்லி இறங்கி நடந்தேன் ! மனம் மட்டும் அவரது இறுக்கமான முகம் , தீவிரமான பேச்சு , திரும்ப திரும்ப UP பற்றியே கேட்டதை அசைப்போட்டபடி வந்தது.

எத்தனையோ சகோதரி என்றழைக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் முகம் வந்துப் போனாலும் கலவரத்தையும் , ஒரு வித வெறுப்புக் கலந்துக்கேட்ட கேள்விகளும் என்னை அன்று முழுவதும் சுற்றி சுற்றி வந்தது என்னவோ நிதர்சனம்...

No comments:

Post a Comment