Saturday 19 September 2015

Bajrangi Baijan - சுமி சினிமாஸ்

Bajrangi Baijan
என்னடா . இது தமிழ்ப்படம் போல் இல்லையே என்று நினைத்தால் ஆம்..சுமி_சினிமாஸ் ல் ..வேற்று மொழித்திரைப்படங்களும் வர இருக்கிறது என்பதன் முன்னோட்டம் . (நாம லேட்டாப்பாத்துட்டு எப்படில்லாம் சமாளிக்க வேண்டிருக்கு :p)
சென்ற ஜூலை , ஈத் பண்டிகைக்கு வெளியாகி , வசூல் சாதனைப் படைத்தத்திரைப்படம்.
சல்மான் கான் தனது தயாரிப்பில் , ராக்லைன் வெங்கடேஷ் உடன் இணைந்து தயாரித்தத்திரைப்படம் .
ராக்லைன் வெங்கடேஷ் அவ்வளவு சீக்கிரம் லிங்கா விலிருந்து மறந்திருக்க மாட்டோம் tongue emoticon .
கிரிக்கெட் இந்தியா - பாகிஸ்தானை ஆட்டிப்படைப்பதில் துவங்கும் படம் , சுல்தான் பூர் என்ற பாகிஸ்தான் காஷ்மீரில் ஷாஹிதா என்றப்பெண் பிறக்கிறாள்.
அவள் வாய் பேச முடியாமல் இருப்பதால் , விஸா பெற்றுக்கொண்டு தாயுடன் , டெல்லியில் உள்ள தர்ஹாவிற்கு வந்து வழிபட்டு திரும்பும்போது ட்ரெயினிலிருந்து இறங்கிட தாயை பிரிவது..அச்சச்சோ.. அடப்பாவமே , இனி இவள் எப்படி சேர்வாள் என்ற ஆர்வத்தை விதைத்து நம்மை படம் பார்க்கும் சுவாரஸ்யத்தைக்கூட்டுகிறார் இயக்குனர் கபீர் கான் .
குருஷேத்ரத்தில்
செல்பீ..லே லே ,பாட்டுடன் அனுமன் பக்தராக அறிமுகமாகிறார் சல்மான், பவன் சதுர்வேதி , அத்தனை பவ்யம் , டெடிகேஷன் .
தீவிர பஜ்ரங் பலி..ஆஞ்சனேய பக்தரான பவனிடம் சேர்கிறாள் சிறுமி (ஹர்ஷாலி மல்ஹோத்ரா) இவர்தான் ஹீரோவுடன் ஒட்டி இழையும் அழகை தாரைவார்க்கும் , நம் ஹீரோயின் .
ப்ராமின் கூட்டுக்குடும்பம் , மல்யுத்தம் அவர்களது பொழுதுபோக்கு எனவும்..டெல்லி சாந்தினி சவுக் காட்சிகள்
யதார்த்தம் சேர்க்கின்றன.
தந்தையின் நண்பராக தயானந்த் (sharat saxena - மும்பை எக்ஸ்பிரஸ் ல் சக்சேனா வாக வருவாரே அவரே இவர் :)) அவர் பெண் ரசிகாவாக கரீனா கபூர் கான்..கண்களில் தீட்டிய மையுடன் , வெகு டீஸண்டாக வளைய வருகிறார் , ஹீரோக்கும் ஹெல்போ ஹெல்ப் செய்கிறார்.
மிகுந்த சிரமப்பட்டு வாய்ப்பேச இயலாத சிறுமியிடம் அவள் பாகிஸ்தானி என்பதை தெரிந்துக்கொள்ளும் காட்சிகள் சுவையோ சுவை.
அந்தக்குட்டிப்பெண் பேசாமல் பேசி..அள்ளுகிறார் மனதை.
அந்தப்பெண்ணை..தீவிர ஹிந்து, அனுமன் பக்தர்.. வாயில் எப்போதும் ஜெய் ஸ்ரீராம் .. எப்படி விஸா இல்லாமல் பாகிஸ்தானில் பெற்றோர் களின் சிறுமியை சேர்க்கிறார் என்று மீதிக்கதை செல்கிறது. அமைதியான நதிப்போல.
எல்லையிலும் , பாகிஸ்தானில் உள்ள மசூதியில் ஓம் புரியை சந்திக்கும் போதும் , எப்படியும் செய்தி சேகரித்திட முயலும் chand nawab (Nawazuddin siddhiqui) பாத்திரப்படைப்பிலும்..மனிதம் மட்டுமே வாழ்கிறது இரு நாடுகளுக்கு இடையிலும் என்பதை உணர்த்துகின்றன.
நேர்மையாக , தான் அனுமன் பக்தன் என்றும் உண்மையைக்கூறும் சல்மான்.. கண்களில் அதே நேர்மையுடன் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்.
இறுதிக்காட்சிகள், கண்களை குளமாக்குகின்றன.
Shahid afridi ஜெயிச்சதும் உதைக்கும் குழந்தை , கை விலங்கை திருடினால் அரெஸ்ட் செய்ய மாட்டார்கள் என்று திருடி வைத்துக்கொள்வது , குட்டி (முன்னி) க்கு பிடித்த வளையலுக்காக அவளைத்தேடி ஓடுவது , வீடியோ வரைல் என அணு அணுவாக செதுக்கி இருப்பது ரசனை.
ப்ரீத்தம் அவர்களது இசையில் 11 பாடல்கள் அலுப்புத்தட்டாமல் வந்து செல்கின்றன.
ராஜஸ்தான் , பனி சொட்டும் காஷ்மீர் , பரபரப்பான டெல்லி என மாத்தி மாத்தி பயணிக்கும் கேமராவைக் கையாண்டிருக்கும் அஸீம் மிஸ்ரா அசத்துகிறார் அனைத்தும் ப்ரேம்களிலும்.
குடும்பத்துடன் ஒரு திரைப்படம் , அட்வைஸிங் மெசேஜாக இல்லாமல்..உணர வைக்கும் பஞ்ரங்கி பைஜான்..மிஸ் பண்ணக்கூடாத திரைப்படம்.

No comments:

Post a Comment