Saturday 29 August 2015

அனுபவம் பலவிதம் ..இதில் அதில் ஒரு (வி)இதம்

கோவையில்
ஒரு மாலுக்கு செல்ல டாக்ஸி ..வழக்கமான கம்பெனி தான்..

ஏறி உக்கார்ந்ததும்..ரொம்ப கோபமா இருந்தார்.. டிரைவர்..
கவனித்தால்.கடந்துபோன பைக்கிலிருந்து ஒரு இளைஞன்..இவரை கெட்ட வார்த்தையில் பேச..இவரும் பதில் தர.. நிலமையை சுமுகமாக்க.
"என்ன செய்யறது..இந்த காலத்தில் பசங்க கொஞ்சம் சட்டுன்னு மரியாதை இல்லாமல் பேசிடறாங்க" என நா சொல்ல..
அப்போது ஆரம்பித்தவர்..
வளர்க்கும் விதம் சரியில்லைங்க , இந்த காலத்தில் பெற்றோர்கள்.. பிள்ளைகளுக்கு கேட்டது எல்லாம் வாங்கித்தரறாங்க..நல்லது..கெட்டது..தெரியல..

அதோட சினிமா மட்டும் என்ன..எதெல்லாம் சொல்லித்தரக்கூடாதோ அதைத்தான் சொல்லித்தருது   ....

60 வயசு ஹீரோ..20 வயசுப்பொண்ணொட ஆடிட்டு..கடவுள் என்னை சோதிக்கிறார்..ந்னு சொன்னா நியாயமாங்க..கொஞ்சமாவது சமுதாய பொறுப்பு இல்லையே...இவர் நினைச்சா தடுக்க முடியாதாங்க.." என்றதும்..எனக்கு..உங்களை மாதிரிதான்..எங்க வரார் ந்னு புரிஞ்சு பக்குன்னு இருந்தது. .

சினிமா ஒரு கமர்ஷியல் மீடியா தானேங்க.. பணம் தானே எல்லாம்..அவங்களை வச்சு எத்தனை குடும்பங்கள் சம்பாதிக்கறாங்க..ந்னு நா சொல்லவும்..

என்ன மேடம் பட்டுன்னு உடைச்சிட்டீங்க..அப்ப ஏன் கலையுலகம்..சேவை ந்னெல்லாம் சொல்றாங்க என்றார்..
நான்..ஏன் நீங்க எதாவது பாபுலர் டிவி ஷோல பேசினீங்களா..இப்படி பாயிண்ட்ஸா அடுக்கறீக்களே ந்னதும்...

என்னமேடம்..வாயடைக்க வச்சுடறீங்களே ..சட்டுன்னு சொல்லி சிரித்தார்.. :)

அப்படியே.. பேச்சு..இன்றைய கல்லூரி பெண்கள் பற்றியும் திரும்ப..
" யார் எதை சொன்னாலும்..செஞ்சாலும் நம்பிடறதா...விழிப்புணர்வு வேணும்..மேடம்..அதையும்..நம்பிள்ளைகளுக்கு நாம் சொல்லி தந்தே வளக்க்கோணும்.." என்றார்...கொங்குத்தமிழில்..தீர்க்கமாக..

ஆமாம்..இது நடந்தது கோவையில்...

இவர் விழிப்புணர்வு என்றதும்...நான் சொன்னவழியில் செல்கிறாரா என்று சரிபார்த்தும்கொண்டேன்..
(நம் கவலை. நமக்கு)..

இறக்கி விடும்போது.".ஏண்டா இவன் வண்டில ஏறினோம்ன்னு நினச்சீங்களா.".என்றார் .

நான் " சேச்சே ! அப்படில்லாம் இல்லீங்க.. எத்தனை விஷயத்தை போறபோக்குல..எத்தனை கோர்வயா பேசறீங்க வாழ்த்துக்கள்"  என்றேன்..

இதே ...மரியாதையில் சிறந்த கோவையில் அதற்கு..
.மற்றொரு மாறுபட்ட சம்பவமும் நடந்தது...அதையும் எழுதுகிறேன்..!..

போட்டோ நானெடுக்கலிங்க .. கூகுளில் சுட்டதே , இருந்த பேச்சில் இறங்கினா போதும் இறங்கிட்டேன்.. 

No comments:

Post a Comment