Monday 20 July 2015

திருமாலை -7.

தொண்டரடிப்பொடியாழ்வார்
திருமாலை -7.
தொண்டரடிப்பொடியாழ்வார் சோழ நாட்டில் பிறந்து தந்த தமிழ் பக்தி இலக்கியங்கள் திருமாலை , திருப்பள்ளியெழுச்சி .இவையிரண்டுமே திருவரங்கம் வாழ் அரங்கனை, ஸ்ரீ ரெங்க நாதரை பாடியவை.
முன்பு பார்த்த 6 பாசுரங்களிலும் பார்த்து வருகிறோம் ஆழ்வாரின் பர பக்தியையும் , அவர் நமக்கு கூறும் நாம மகிமைகளையும். இனி இன்றைய பாசுரம் காண்போம்.

பாசுரம்..
புலையறமாகிநின்ற புத்தொடுசமணரெல்லாம்
கலையறக்கற்ற மாந்தர் காண்பரோகேட்பரோதாம் ?
தலையுறுப்புண்டும் சாகேன் சத்தியங்காண்மின் ஐயா !
சிலையினாலிலங்கைசெற்ற தேவனே தேவனாவான் .


பாசுர விளக்கம்..
கலையறகற்ற மாந்தர் -
வேத சாஸ்திரங்களை நன்கு சந்தேகமின்றி கற்ற மாந்தர் ,
புலையறமாகிநின்ற புத்தோடு சமணரெல்லாம் - நீச தர்மம் (பரப்பொருள் உண்டு என்பதையும் , வேதங்களை ஏற்காமல் , தானே தெய்வம் என்றும் தர்மமின்றி இருந்த மதங்கள்) கொண்ட புத்த , சமண மதங்களை கண்களைக்கொண்டு காண்பாரோ இல்லை காதால் கேட்டு ஆராய்ச்சி செய்வாரோ..?
சிலையினாலிலங்கைசெற்ற தேவனே தேவனாவான் - தன் வில்லாலேயே தர்மத்தின் வழியில் இலங்கையையும் , அதன் அரசன் இராவணனையும் வென்ற ராமனே தேவர்களுக்கெல்லாம் தேவன் ஆவான்..

தலையறுப்புண்டும் சாகேன் சத்தியங் காண்மின் ஐயா..
என் தலை அறுத்தாலும் நான் சாக மாட்டேன் இது சத்தியமாகும்..

தொண்டரடி பொடியாழ்வார் , சென்ற பாசுரங்களில் நாம மகிமையையும் , ரெங்கா என்ற நாமம் கூற தவறியவன் பிணத்தை பறவையும் முகர்ந்துப்பார்க்காது என்று கூறியவர்..

இப்பாசுரத்தில் , ஸ்ரீ ராமரது பெருமையை கூறி ..அவரே தேவர்களுக்கெல்லாம் தேவனாகிறார்..என்றும் அதை தான் தலையறுத்துக்கொண்டாலும் சாக மாட்டேன் என தன் மீதே சத்தியம் செய்து , நன்கு வேத சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்தவர்கள்..அன்று இருந்த புத்த , ஜைன மதங்களை கண்களால் கண்டோ , கேட்கவோ மாட்டார்கள்..என்கிறார்..

அன்றைய காலக்கட்டத்தில் இருந்த மதங்கள் அதனால் மனிதர்கள் பட்ட பாடு பல சரித்திரங்களில் அறியப்பெறுகிறோம்.
இது ஆழ்வாரின் தர்மத்தில் சிறந்த ஸ்ரீ ராமனே உற்ற தெய்வம் என்று தன் கூற்றையே ஆணித்தரமாக உணர்த்தும் பாசுரமாக கொள்ளலாம்.
இனி அடுத்த பாசுரம் நோக்கி செல்வோம்..
அரங்கனின் அருளோடு, ஆழ்வாரின் பதம் பற்றியே..

No comments:

Post a Comment